Saturday, February 21, 2009

காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு : வக்கீல்கள் இன்று முடிவு

காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்ய வழக்கறிஞர்களின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பால் கனகராஜ் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், நீதிமன்றங்களைப் புறக்கணிக்கும் முடிவை வழக்கறிஞர்கள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

"சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸôர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வழிகளில், பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைப்பது குறித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும்.

அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய வழக்கறிஞர்களின் குழு ஒன்று அமைக்கப்படும். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்'' என்றார் கனகராஜ்.மேலும்.......
புதிய திருப்பூர் மாவட்டம் இன்று உதயம்
நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படைத் தாக்குதல்: புலிகள் அறிவிப்பு

No comments:

Post a Comment