Wednesday, June 24, 2009

3 காதலர்களிடம் சிக்கி தவிக்கும் பெண் என்ஜினீயரின் கண்ணீர் கதை

சென்னை அடையாறில் வசிப்பவர் சங்கரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தொழில் அதிபரான இவரது மனைவி மத்திய அரசு அதிகாரியாக உள்ளார். இவரது மகன் என்ஜினீயராக இருக்கிறார். நல்ல வேலையில் கைநிறைய சம்பளம் வாங்குகிறார். மகள் கல்லூரியில் படிக்கிறார். மகனுக்கு திருமணமாகி விட்டது. மகனின் மனைவி காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ஜினீயரிங் படித்துள்ளார். அவரும் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் கம்ப்ïட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அதற்கு ஏற்ப சங்கரனின் குடும்பமும் இருந்தது.

இந்த குடும்பத்தில் கடந்த 11/2 வருடங்களாக பெரும் புயல் வீசியது. சங்கரனின் மனைவி வீட்டில் வைக்கும் பணமும், நகையும் திருட்டு போனது. பீரோவில் மகள் திருமணத்துக்காக ரூ.7 லட்சம் வைத்திருந்தனர். அதில் ரூ.1 லட்சம் திருட்டு போய்விட்டது. ஆனால் பீரோ உடைக்கப்படவில்லை. அதேபோல், சங்கரனின் மனைவியின் 13 சவரன் நகைகளும் மர்மமாக களவாடப்பட்டது. பீரோவில் வைத்தால் திருட்டு போகிறது என்று பூஜை அறையில் நகை, பணத்தை வைத்து பார்த்தார். அங்கும் திருட்டு சம்பவம் நடந்தது.மேலும் படிக்க

No comments:

Post a Comment