Tuesday, June 2, 2009

தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்

சென்னை மாநகராட்சி மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு வழங்கும் திட்டம், முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான நாளை முதல் தொடங்கப் படுவதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.


ரிப்பன் மாளிகையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: முதலமைச்சர் கருணாநிதி நாளை 86வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 70 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டு வருகிறார்.

அதன் அடையாளமாக அவரது பிறந்த தினமான நாளை முதல் சென்னை மாநகராட்சி மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தை களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் மாநகராட்சியின் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. மேலும் படிக்க

No comments:

Post a Comment