Thursday, June 11, 2009

கள்ளக்காதலனை அடித்து கொலை செய்த பெண்

தஞ்சாவூரை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 48). இவருடைய மனைவி கோமதி. 4 குழந்தைகள் உள்ளன. குழந்தைகளுடன் கோமதி தஞ்சாவூரில் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து வேலை தேடி ஜெயகாந்தன் சென்னை வந்தார். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அங்கேயே படுத்து உறங்குவார்.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அருணா (34) என்ற பெண்ணை ஜெயகாந்தன் சந்தித்தார். இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இந்த பழக்கம் கள்ளக் காதலாக மாறியது. அருணாவுக்கு ஏற்கனவே சவுடய்யா என்பவருடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

ஜெயகாந்தன், அருணா இருவரும் தாலி கட்டிக் கொள்ளாமலேயே கணவன்-மனைவியாக வாழத் தொடங்கினார்கள். சென்னை புறநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை மதுரவாயல் பள்ளிக்குப்பம் ரெட்டியார் அகரம் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்கு குடிவந்தனர். வீட்டு வேலை உள்பட கிடைத்த வேலைக்கு எல்லாம் அருணா சென்று வந்தார்.

வெளியில் ஆண்களுடன் சகஜமாக பேசி பழகுவார்.மேலும் படிக்க

No comments:

Post a Comment