Thursday, October 29, 2009

கொக்கோக முனிவரின் காமசாஸ்திரம்

"கொக்கோகம்" எனும் இந்நூல் கொக்கோக முனிவரால் இயற்றப்பட்டது. இது ஒரு காமநூலாகும். ஆனால் இது வெறும் போகக்கலையை மட்டும் விவரிக்கும் ஓர் ஆபாச நூல் அல்ல. மனித இனத்கிற்குள்ள முப்பெரும் கடமைகள் அறம், பொருள், இன்பம் ஆகும். இம்மூன்று கடமைகளில் முதலிரண்டு கடமைகளை விவரிக்கும் நூல்களை மனு முதலிய முனிவர்கள் இயற்றினர்.

இன்பம் துய்த்தல் என்னும் மூன்றாவது கடமைக்கு வழிகாட்டும் நூலான மதனகாமத்தை நந்திகேசுவரர் என்ற முனிவர் சமஸ்கிருத மொழியில் எழுதினார். சனற்குமார முனிவர் "சனற்குமாரம்" என்ற நூலை எழுதினார். அதன்பின்னர் வாத்சாயனர் "காமசூத்திரம்" என்ற நூலை எழுதினார். இந்த வரிசையில் கடைசியாக எழுதப்பட்டது "கொக்கோகம்" ஆகும்.

கொக்கோகத்தை பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் தமிழில் கவிதை நடையில் எழுதி தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் படிக்க

No comments:

Post a Comment