சென்னையில் நடன அழகியை கற்பழித்து கொலை செய்துவிட்டு ஓட்டல் ஊழியர் தப்பி ஓடிவிட்டார். கொலையை மறைத்ததாக நடன அழகியின் தோழியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர் காயத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்மா (வயது 30). நடன அழகியான இவர், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று ஓட்டல்களில் நடனமாடுவது மூலம் பணம் சம்பாதித்து வந்தார். கடந்த புதன்கிழமையன்று தனது கணவருடன் அஸ்மா சென்னை வந்தார். ஜாபர்கான்பேட்டை திருவீதி அம்மன் கோவில் 2-வது தெருவில் வசிக்கும் தனது தோழி அனு என்ற அன்னம்மா வீட்டில் இரவு தங்கினார். அஸ்மாவின் கணவர் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார்.
அன்று இரவு அஸ்மாவும், அன்னம்மாவும் ஒன்றாக உட்கார்ந்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். பிறகு மது அருந்தியதாகவும் தெரிகிறது. நள்ளிரவு அன்னம்மாவின் கணவர் ரஞ்சித் வீட்டுக்கு வந்தார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரஞ்சித் பணியாற்றுகிறார். ரஞ்சித் வந்தபிறகு வீட்டின் ஒரு அறையில் அஸ்மா படுத்து தூங்கினார். இன்னொரு அறையில் ரஞ்சித்தும், அன்னம்மாவும் தூங்கினார்கள்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment