Thursday, April 16, 2009

அ.தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டமும், முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் சென்னை தீவுத் திடலில் நேற்று மாலை நடந்தது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில், உங்கள் வாக்குகளைப் பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையில், தி.மு.க. அங்கம் வகித்த கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், இந்த மத்திய அரசு உங்களுக்கு என்ன நன்மை செய்தது? காங்கிரசும், தி.மு.க.வும் இணைந்த மத்திய அரசால் நீங்கள் அடைந்த பயன் என்ன? மேலும் படிக்க

No comments:

Post a Comment