Thursday, June 4, 2009

காதலி உயிரை விட சொன்னதால் நடுரோட்டில் தீக்குளித்த பட்டதாரி வாலிபர் பரிதாப சாவு

சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மெக்கானிக் ஷெட் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவரது மூத்த மகன் சுரேஷ்குமார் (வயது 24). எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சுரேஷ்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வேறு நல்ல வேலைக்கும் முயற்சித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறமுள்ள திருமூர்த்திநகரின் 2-வது ரோட்டிற்கு சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றார். திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றினார். பின்னர் உடலில் தீ வைத்துக்கொண்டார்.

தீ உடல் முழுவதும் பிடித்ததும் `காதல் வாழ்க' என்று கத்தியபடி ரோட்டில் அங்கும், இங்கும் ஓடினார். மேலும் படிக்க

1 comment:

  1. Kaadhal nalla visayam thaan but atharkaaga uyirai viduvathu aetruk kolla mudiyatha visayam......

    ReplyDelete