இலங்கையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளனர் என்றும் அவர்கள் படும் துன்பங்களை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்று இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் என். சில்வா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நெகோம்பா மாவட்டத்தில் உள்ள மாரவிலா என்னுமிடத்தில் நீதிமன்றக் கட்டிட வளாகத்தை திறந்து வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறியதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அவர் கூறியதாக வெளியாகியுள்ள கருத்துக்கள்:
செட்டிகுளம் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களை நேரில் பார்வையிட்டேன். அவர்கள் மீது இலங்கை அரசு எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. இலங்கையின் சட்டத்தின் கீழ் அவர்கள் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது. இதை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதை கூறுவதற்காக இலங்கை அரசு என்னை தண்டித்தாலும் பரவாயில்லை. மேலும் படிக்க
No comments:
Post a Comment