Thursday, July 2, 2009

ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் அல்ல டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு

ஒருமித்த உணர்வோடு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் அல்ல என்று டெல்லி ஐகோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இயற்கைக்கு மாறாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளும் ஓரினச் சேர்க்கை பல்வேறு நாடுகளில் குற்ற செயலாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின் படி, இது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு இதில் ஈடுபடுகிறவர்களுக்கு 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படுகிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதி தண்டனை வழங்கிய இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அந்த சட்டத்தை நீக்கி விட்டன. அதுபோல, இந்தியாவிலும் இந்த சட்டத்தை ரத்து செய்யுமாறு ஓரினச் சேர்க்கையாளர்களும், ஆரவாணிகளும் கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேலும் படிக்க

No comments:

Post a Comment