Wednesday, December 9, 2009

இன்டர்நெட்டில் பரவும் சினேகா கவர்ச்சி படம்

தமிழ், தெலுங்கு படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் சினேகா. கவர்ச்சியாக நடிக்கும்படி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சம்பளத்தையும் உயர்த்தி ஆசை காட்டினார்கள். ஆனால் சினேகா சம்மதிக்கவில்லை.

இப்போது திடீரென மனதை மாற்றிக் கொண்டு உள்ளார். “கோவா” படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். நீச்சல் உடையிலும் கலக்குகிறாராம். அவர் நடித்த காட்சிகள் ரகசியமாக படமாக்கப்பட்டு உள்ளன. படம் ரிலீசாவது வரை தனது நீச்சல் உடை ஸ்டில்களை வெளியிடக்கூடாது என்று நிபந்தனை விதித்தாராம். ஆனால் அதை மீறிபடங்கள் வெளியாகி விட்டன.
படம் பார்க்க

Tuesday, December 8, 2009

ரெயிலில் நடிகை சொர்ணமால்யாவிடம் சில்மிஷம்

ஓடும் ரெயிலில் தன்னை ஒருவர் சில்மிஷம் செய்ததாக, நடிகை சொர்ணமால்யா எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் முத்துநகர் எக்ஸ்பிரசில் கடந்த 3-ந் தேதி திண்டுக்கல்லில் இருந்து எழும்பூருக்கு சொர்ணமால்யா சீட் நம்பர் 31-ல் லோயர் பெர்த்தில் வந்ததாகவும், இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் ஒருவர் தன்னை தொட்டு சில்மிஷம் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும்படிக்க

Monday, December 7, 2009

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

மூவேந்தர் முன்னணி கழக மகளிர் அணி செயலாளராக நடிகை புவனேசுவரி நியமனம்

ஒரே நாளில் 315 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்: தி டைம்ஸ்

ஆந்திராவின் 10 மாவட்டங்கள் 2-வது நாளாக முடங்கின

ரி‌லைய‌ன்‌ஸ் நிறுவன‌ம் மீது நடவடி‌க்‌கை எடு‌க்க அரசு முடிவு

ஜெயலலிதா மீதான லண்டன் ஓட்டல் வழக்கு வாபஸ்

கிழக்கு இலங்கையில் மக்கள் விடுதலை ராணுவம் உதயம்

சோமாலியா கடற் கொள்ளையர்களை விரட்டியடித்தது இந்திய கடற்படை

இந்தியா-ரஷியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

உறவுக்கு மறுத்ததால் மனைவிக்கு “எய்ட்ஸ்” ஊசி போட்ட கணவர்

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜேம்சன். இவருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருந்தது. அதற்கு பிறகு இவருடைய மனைவி இவருடன் உறவில் ஈடுபட மறுப்பு தெரிவித்து வந்தார்.இதனால் கோபம் அடைந்த ஜேம்சன் மனைவிக்கும் எய்ட்ஸ் நோயை பரப்பி விட திட்டமிட்டார்.
மேலும்படிக்க

Thursday, December 3, 2009

இந்தியா - இலங்கை டெஸ்ட் கிரிகெட் 2-ம் நாள் Live

இந்தியா - இலங்கை டெஸ்ட் கிரிகெட் 2-ம் நாள் Live

இந்தியா - இலங்கை டெஸ்ட் கிரிகெட் Live

இந்தியா - இலங்கை டெஸ்ட் கிரிகெட் Live

Friday, November 27, 2009

ரூ.30 ஆயிரம் வரதட்சணை பாக்கி : மணமகன் தலைமறைவு

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், இந்துபூர் பேட்டை மண்டலத்தை சேர்ந்தவர் உக்கால கிருஷ்ணய்யா. இவருடைய மனைவி வெங்கடம்மா. இவர்களுடைய மகள் சந்தோஷ் குமாரி (வயது 24). பி.எஸ்.சி. பி.எட் பட்டதாரியான இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், சென்னை கொளத்தூர் வசந்தம் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த மால கொண்டய்யாவின் மகன் மாலயாத்திரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மாலயாத்திரி மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) வேலை பார்த்து வருகிறார்.

திருமண வரதட்சணையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணமும், 7 சவரன் நகையும் கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். அதற்கு பெண் வீட்டாரும் ஒப்புக்கொண்டனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதை தொடர்ந்து இரு வீட்டாரும் பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் நேற்று காலை இவர்களுடைய திருமணம் நடப்பதாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு அதே திருமண மண்டபத்திலேயே திருமண வரவேற்பு நிகழ்ச்சி `தடபுடல்' விருந்துடன் நடந்தது.

திருமணத்திற்காக பெண் வீட்டார் தரப்பில் 100-க்கும் மேற்பட்டோர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்திருந்தனர். அங்கு வந்த அவர்கள் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணத்தை வரதட்சணையாக மாப்பிள்ளையிடம் கொடுத்தனர். மீதிப்பணத்தை தாலி கட்டும் நேரத்தில் தருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மணமகன் மாலயாத்திரி `திடீரென்று' காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. திருமண முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டே இருந்தது.