Thursday, April 30, 2009

இலங்கை இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்

இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.

பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.

இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.

புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது
-முத்தமிழ் வேந்தன்

Wednesday, April 29, 2009

சென்னை :அம்பத்தூரில் இளம்பெண் மகனுடன் படுகொலை கள்ளக்காதலன் கைது.

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள கிழக்கு பாலாஜி நகர் 5-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலாஜி. பாடியில் உள்ள வீல்ஸ் இந்தியவில் ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி ஹரிணி (வயது 37). இவர்களுடைய மகன் அனிரூத் (11).

கடந்த ஞாயிற்று கிழமை அன்று வீட்டில் ஹரிணியும், அவருடைய மகன் அனிரூத்தும் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கை துப்பு துலக்க அம்பத்தூர் துணைக்கமிஷனர் சமுத்திரபாண்டியன் தலைமையில் தனிப்படையை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் அமைத்து உத்தரவிட்டார்.

இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டனர். படுகொலை செய்யப்பட்ட ஹரிணிக்கு ஏராளமான கடன் தொல்லை இருந்தது. கணவனின் வருமானம் வீட்டு கடன் கட்டகூட போதவில்லை. இதனால் எப்படியாவது எந்த வழியிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஹரிணி முடிவு செய்தார்.

அதன்படி தன்னிடம் உள்ள அழகை முதலீடாக்கி தொழில் அதிபர்கள், வசதி படைத்தவர்கள், 20 வயதில் தொடங்கி 60 வயது வரை வயது வித்தியாசமின்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் ஹரிணி பழக்கம் வைத்திருந்தார். இந்த ஆண் நண்பர்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கி ஊர் சுற்றுவதும், இதில் சில பேருடன் உல்லாசமாக இருப்பதும் என ஒரு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஹரிணியின் ஆண் நண்பர்கள் அனைவரையும் கூண்டோடு பிடித்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அயனாவரம் யுனைடெட் இந்தியா காலனியை சேர்ந்த தன்ராஜ் (28) என்ற வாலிபர் மட்டும் போலீஸ் விசாரணைக்கு வரவில்லை.

அவரை தேடிச் சென்று போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது ஹரிணியை யாரென்றே தெரியாது என்று கூறிய அவர் பின்னர் வியாபார விஷயமாக ஹரிணியுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து தன்ராஜ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஹரிணியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் 2 பேரையும் பணத்திற்காக கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

தன்ராஜ் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் ஓட்டேரியில் பிளாஸ்டிக் ஸ்பிரிங் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தேன். நண்பர்கள் மூலம் ஹரிணியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் மணிக்கணக்கில் பேசிக்கொள்வோம். என்னை மட்டுமே அவர் காதலிப்பதாக கூறி வந்ததை நம்பி ஹரிணிக்கு ஏராளமான பணத்தை கொடுத்தேன். அவளை காரில் ஏற்றிக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்தேன். இதனால் தொழிலை கவனிக்காமல் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஹரிணிக்கு என்னை போலவே ஏராளமான பேருடன் பழக்கம் உள்ளது என்பது தெரிய வந்தது. இருப்பினும் அவள் மீது இருக்கும் மோகத்தில் பொறுத்து கொண்டு இருந்தேன். இந்த சூழ்நிலையில் ஹரிணி வீட்டை விற்பதாக கூறினார். ஆகவே பணம் வந்தால் எனக்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டேன். அவளும் தருவதாக கூறியிருந்தாள்.

சம்பவத்தன்று காலை ஹரிணிக்கு பணம் கேட்டு போன் செய்தேன். முதலில் காலை 10 மணிக்கு வரச் சொன்ன அவள், சிறிது நேரத்தில் எனக்கு போன் செய்து வீடு வாங்க வருபவர்கள் ரூ.5 லட்சம் பணத்துடன் வருகிறார்கள். எனவே, 1 மணிக்கு என்னை வரச் சொன்னாள். பகல் 12 மணிக்கு ஆட்டோ மூலம் ஹரிணியின் வீட்டிற்கு போனேன். வீட்டின் கூடத்தில் ஹரிணியின் மகன் அனிரூத் டி.வியில் `போகோ' சேனலை பார்த்துக் கொண்டிருந்தான்.

படுக்கை அறையில் ஹரிணி உடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள். நானும் அந்த அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டேன். மேலும் படிக்க

நடிகை ஜெயசுதா கைது

ஆந்திரா மாநிலம் செகந்திராபாத் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ஜெயசுதா போட்டியிடுகிறார். அங்கு தேர்தல்கள் முடிந்து விட்டன.

இந்நிலையில் நடிகை ஜெயசுதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. அவர் கடந்த 3-ந் தேதி நாமாலகுண்டு சவுரஸ்தா என்னும் பகுதியில் தனது கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது சாலையின் மத்தியில் கட்சி கொடியேற்றி, வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்ததாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும், பொது மக்களும் சிலகலகூடா என்ற போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் ஜெயசுதா திறந்து வைத்த தேர்தல் அலுவலகத்தை இழுத்துப் பூட்டி `சீல்' வைத்தனர்.

கட்சி கொடிக் கம்பத்தையும், தேர்தல் அலுவலகத்தில் இருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் படிக்க

Tuesday, April 28, 2009

பிரபாகரன் சரண் அடைய சிதம்பரம் வேண்டுகோள்

பிரபாகரனும் அவருடைய தோழர்களும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைய வேண்டும், அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார்.

பிரபாகரனுக்கு கெடுதலாக ஏதும் நடந்துவிடக்கூடாது என்றே விரும்புகிறோம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பேச்சுக்கு வந்தால் அவர்களுடைய உயிர்களுக்கு ஆபத்து நேரும் என்று அஞ்சுவதற்கு முகாந்திரம் இல்லை. மேலும் படிக்க

சென்னையில் ரூ.1 1/2 கோடி பணத்துக்காக பிரபல ஜவுளிக்கடை அதிபரின் மகன் கடத்தல்

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.1 1/2 கோடி பணத்துக்காக ஜவுளிக்கடை அதிபரின் மகனை கடத்தி சென்ற பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.87 லட்சம் பணம் மீட்கப்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் `கலந்தர் மதினா டெக்ஸ்டைல்ஸ்' என்ற பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளரின் பெயர் கலந்தர் நைனார் முகமது. கோடீஸ்வரரான இவரது மகன் யூனிஸ்கான் (வயது 24). தந்தையோடு சேர்ந்து ஜவுளிக்கடையை கவனித்து வந்தார்.

இவருக்கு வருகிற மே 10-ந் தேதியன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு யூனிஸ்கான் ஜவுளிக்கடையில் இருந்து அருகில் உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த நைனார் முகமது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவன் ஜவுளிக்கடை அதிபர் நைனார் முகமதுக்கு செல்போனில் பேசினான். யூனிஸ்கானின் செல்போனில் இருந்து அந்த ஆசாமி பேசினான். ரூ.11/2 கோடி பணத்துக்காக உங்கள் மகனை கடத்தி வந்து சிறை வைத்துள்ளோம் என்றும் ரூ.11/2 கோடி பணத்தை தந்தால் உங்கள் மகனை பத்திரமாக விட்டு விடுகிறோம் என்றும் செல்போனில் பேசிய ஆசாமி குறிப்பிட்டான்.

போலீசுக்கு போனால் உங்கள் மகனை உயிரோடு பார்க்க முடியாது. உங்கள் மகன் உடலில் வெடிகுண்டுகளை கட்டி வைத்துள்ளோம். நீங்கள் போலீசுக்கு போனால் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உங்கள் மகனின் உடலை சின்னாபின்னமாக்குவோம். சினிமா பட பாணியில் சிதைந்து போன உங்கள் மகனின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி உங்கள் வீட்டு வாசல் முன் வீசுவோம் என்று செல்போனில் பேசிய ஆசாமி மிரட்டினான்.

இதனால் பயந்து போன நைனார் முகமது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். உடனடியாக போலீசாரிடம் ரூ.11/2 கோடி பணத்துக்காக எனது மகனை கடத்தி சென்றுள்ளனர் என்ற தகவலை தெரிவித்தார்.

எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் நான் பணத்தை கொடுக்கும்போது நீங்கள் மாறுவேடத்தில் வந்து பிடித்துக் கொள்ளுங்கள் என்றும் போலீசாரை நைனார் முகமது கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க

Monday, April 27, 2009

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை

மும்பை நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கியது தொடர்பான வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.70 லட்சம் அபராதமும் விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர் எம்.கோபாலகிருஷ்ணன். மும்பையை சேர்ந்த பி.ஜெ.பைப் மற்றும் வெசல்ஸ் நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கியது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் மீதும், மும்பை துறைமுகம் இந்தியன் வங்கியின் உதவி பொதுமேலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் மீது சென்னை 11-வது சி.பி.ஐ. கோர்ட்டில் 31.3.1993-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

பி.ஜெ.பைப்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் பி.ஜெ.வோரா, இயக்குனர்கள் கீதா வோரா, எஸ்பால், ராமராவ் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். உண்மைகளை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்து ரூ.30 கோடி அளவுக்கு கடன் வழங்கியதால் இந்தியன் வங்கிக்கு ரூ.8 கோடியே 76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருந்தது.
மேலும் படிக்க

Saturday, April 25, 2009

இலங்கையில் `48 மணி நேரத்தில் நல்லது நடக்கும் என்று நம்புவோம்' ப.சிதம்பரம் பேட்டி

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இலங்கையில் நடைபெறும் போர் முடிவுக்கு வந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். இலங்கையில் சகஜநிலை திரும்பவும், போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. அதில் நல்ல முடிவு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்னும் 24 அல்லது 48 மணி நேரம் வரை என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

பிரபாகரனுக்கு கெட்ட நிலைமை வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்ன செய்துகொள்வார் என்று எனக்கு தெரியாது. மேலும் படிக்க

இடம்பெயர்ந்த தமிழர்கள் மீது குண்டுத்தாக்குதல்: 174 பேர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 174 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக், கிபீர், எஃப்-7 ரக வானூர்திகள் இணைந்து குண்டுத் தாக்குதலை நடத்தின.

20 நிமிடம் வரை நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதலின் போது 16 குண்டுகளை சிறிலங்கா வான்படை வீசியுள்ளது.

இதில் மக்களின் 18 கூடாரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் ஆழிப்பேரலை மீளமைப்பின் போது கட்டிக்கொடுக்கப்பட்ட 6 வீடுகளும் முற்றாக அழிந்துள்ளன.
மேலும் படிக்க

Friday, April 24, 2009

இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் இருதரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிரச்னைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முயன்றால் அது இலங்கையின் ஒற்றுமைக்கும், மறுசீரமைப்புப் பணிகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பராக் ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இலங்கைப் பிரச்னை குறித்து அமெரிக்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாகவும், தற்போதைய சூழல் இரு தரப்பினரிடையேயும் பகைமையை வளர்க்கவே உதவும் என்றும், இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் படிக்க

பிரபாகரனை கொல்ல இந்திய உளவுத்துறை சதி

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய இந்திய உளவுத்துறை சதி செய்துள்ளதாக பழ.நெடுமாறன் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய ரா உளவுத்துறை சதித்திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.
மேலும் படிக்க

Thursday, April 23, 2009

சி.பி.ஐ. விசாரணையில் தயாநிதி?

அமைச்சர் என்ற முறையில் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு வசதியை "சன்' டி.வி.க்காக தயாநிதி மாறன் பயன்படுத்தியதை மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) கண்டுபிடித்துள்ளது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆதரித்து சிவகாசியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த ஜெயலலிதா பேசியதாவது:

தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு பி.எஸ்.என்.எல். மூலம் 323 தொலைபேசி இணைப்புகள் அளிக்கப்பட்டன. அவை அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டவை.

உரையாடல் மட்டுமின்றி, ஒலி, ஒளி காட்சிகளையும், தகவல் தொகுப்புகளையும் உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அதன் மூலம் அனுப்பலாம்.

இந்த இணைப்புகளுக்காக தயாநிதி வீட்டிலேயே ஒரு தொலைபேசி இணைப்பகத்தை பி.எஸ்.என்.எல். அமைத்தது.

அமைச்சர் என்ற முறையில், அலுவலகப் பயன்பாட்டுக்காக தரப்பட்ட சிறப்பு இணைப்பு இது. ஆனால் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு செலவில் இந்த இணைப்பு "சன்' டி.வி. அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் படிக்க

சோனியா, மன்மோகன் ஆகியோர் ஓட்டுக் கேட்டு தமிழகம் வரக்கூடாது: தமிழ் திரையுலகம் எச்சரிக்கை

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் திரையுலகம், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலையை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.

இப்போராட்டத்தில்.... மேலும் படிக்க

Wednesday, April 22, 2009

இன்று நடக்கும் 2 ஆம் கட்ட தேர்தலில் 288 கிரிமினல்கள் போட்டி

இன்று நடக்கும் 2 ஆம் கட்ட பாராளுமன்ற தேர்தலில், மொத்தம் 1,633 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 288 பேர் பல வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல்கள்.
மேலும் படிக்க

மன்மோகன்சிங் அவசர ஆலோசனை : உடனடியாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசிடம் வற்புறுத்த முடிவு.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி தமிழ்நாட்டில் இன்று (வியாழக்
கிழமை) அனைத்து தரப்பினரும் தாமாக முன்வந்து வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று இரவு உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். பிரதமரின் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை மந்திரி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும். படிக்க

Tuesday, April 21, 2009

பிரபாகரனை இந்தியா மன்னிக்க கூடாது பிரியங்கா ஆவேசம்

ராஜீவ் காந்தியை கொன்ற பிரபாகரனை இந்தியா மன்னிக்க கூடாது என்று பிரியங்கா ஆவேசமாக கூறினார்.


அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது
பிரபாகரன் பிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு, `இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அரசியல் ரீதியாக என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், ஒரு நாடு என்ற முறையில் அவரை (விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்) இந்தியா மன்னிக்கவே கூடாது' என்று கூறினார். மேலும் படிக்க

பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட 24 மணி நேரக் கெடு முடிவுக்கு வந்தது

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அவரது ஆதரவாளர்களும் 24 மணி நேரத்துக்குள் சரணடைய வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபட்ச விதித்திருந்த கெடு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.


இது குறித்து அதிபர் ராஜபட்சே கூறும்போது:

இலங்கை ராணுவத்துடனான போரில் புலிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கைகளால், வடக்கில் கடலோரப் பகுதியில் வெறும் 17 கிலோ மீட்டர் பரப்பு மட்டுமே இப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப் பகுதிகளையும் விடுவிக்க இலங்கைப் படைகள் தயாராக உள்ளன.

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசின் பாதுகாப்பு வளையத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர்.இதைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பு வளையத்துக்கு உள்பட்ட பகுதியில் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க

Saturday, April 18, 2009

மாயாவதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பேன் : நடிகர் சஞ்சய்தத்

உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதிக்கு, `முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.' திரைப்படத்தில் போல கட்டிப்பிடி வைத்தியம் அளித்து முத்தம் கொடுக்க போவதாக பேசிய இந்தி நடிகர் சஞ்சய்தத் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் சஞ்சய்தத் பேசும்போது,

"நான் நடித்த `முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தது போல பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள மக்களை ஆச்சரியப்படும் விதத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் அதுபோல கட்டிப்பிடி வைத்தியம் அளிப்பேன்'' என்று கூறினார்.

இதனால், பகுஜன் சமாஜ் கட்சியினர் கடும் ஆத்திரம் அடைந்தனர். மேலும் படிக்க

100 நாளில் வெளிநாட்டு கறுப்புப் பணம் மீட்பு: அத்வானி வாக்குறுதி

பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் வெளிநாட்டு கறுப்புப் பணம் மீட்கப்படும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி கூறினார்.

கறுப்புப் பணத்தை மீட்பதற்காக பாஜக சார்பில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிட்டு அவர் பேட்டியளித்தார்.
இதுவரை நாங்கள் சொன்னதை எல்லாம் செய்துள்ளோம். பாஜக இதுவரை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்துள்ளது. இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றுவோம் என்று கூறினோம். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி 1998-ம் ஆண்டு இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றினோம்.

கறுப்பு பண விவகாரம் நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரமும் கூட. கறுப்பு பணம்தான் பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் கறுப்புப் பணம் இருப்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் பணம் எப்படி வந்தது என்பதை கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்ப முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் ரூ. 25 லட்சம் கோடியிலிருந்து ரூ. 70 லட்சம் கோடி வரை இருக்கும் என்று நாங்கள் நியமித்த சிறப்புக் குழு மதிப்பிட்டுள்ளது. அண்மையில் லண்டனில் நடந்த ஜி-20 நாடுகளில் கறுப்புப் பண பிரச்னையை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்திப் பேசாதது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் எதிர்பார்ப்பை உலக அரங்கில் வலியுறுத்திக் கூறுவார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவர் செய்யவில்லை என்றார் அத்வானி.

கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வராதது ஏன் என்று கேட்டபோது...... மேலும் படிக்க

Thursday, April 16, 2009

அ.தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டமும், முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் சென்னை தீவுத் திடலில் நேற்று மாலை நடந்தது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில், உங்கள் வாக்குகளைப் பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையில், தி.மு.க. அங்கம் வகித்த கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், இந்த மத்திய அரசு உங்களுக்கு என்ன நன்மை செய்தது? காங்கிரசும், தி.மு.க.வும் இணைந்த மத்திய அரசால் நீங்கள் அடைந்த பயன் என்ன? மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது விழா புறக்கணிப்பு: டோனி, ஹர்பஜன்சிங் மீது கிரிமினல் வழக்கு

பிரபல கிரிக்கெட் வீரர்களான டோனி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அந்த விருதுகளை வழங்கும் விழா, கடந்த செவ்வாய் கிழமையன்று டெல்லியில் நடந்தது. அப்போது டோனி மற்றும் ஹர்பஜன்சிங் இருவரும் ஜனாதிபதியிடம் இருந்து விருதுகளை பெற வரவில்லை.

இந்த சூழ்நிலையில், டோனி மற்றும் ஹர்பஜன்சிங் இருவருக்கும் எதிராக பீகார் மாநிலம் முஜாபர்புர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சுதிர்குமார் என்ற வக்கீல் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். மேலும் படிக்க

Wednesday, April 15, 2009

நடிகை நயன்தாரா கோவிலுக்குள் சிறைவைப்பு, மன்னிப்பு கேட்டபின் விடுவிக்கப்பட்டார்



நயன்தாரா என்றாலே சர்ச்சைக்குரிய நடிகை என்றாகி விட்டார். நடிகர் சிலம்பரசனுடன் காதல் பிறகு மோதல், இன்டர்நெட்டில் ஆபாச படம், `பையா' படத்தின் சம்பள பிரச்சினைஈ இப்போது பிரபுதேவாவுடன் காதல் என்று பரபரப்புக்கு மேல் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர், சேலை கட்டிய பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிற ஒரு அம்மன் கோவிலுக்குள், சுடிதாருடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகில் கெல்லிக்காவு அம்மன் கோவில் என்ற பழமையான கோவில் உள்ளது. மிக பிரபலமான அந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இதுபற்றி நயன்தாரா ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தார்.

அவர் நடிக்கும் `பாடிகார்ட்' என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு கெல்லிக்காவு அம்மன் கோவில் அருகில் நடந்தது.

படப்பிடிப்பு இடைவேளையில் நயன்தாரா, காரில் அந்த கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் சுடிதார் அணிந்திருந்தார். கெல்லிக்காவு அம்மன் கோவிலுக்குள் சேலை அணிந்த பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது, அந்த கோவிலின் ஐதீகம்.

ஆனால் நயன்தாரா சுடிதாருடன் துணிச்சலாக அந்த கோவிலுக்குள் நுழைந்தார். அம்மனுக்கு முன்னால் நின்றபடி பக்தியுடன் சாமி கும்பிட்டார். அதற்குள், நயன்தாரா சுடிதார் அணிந்து கோவிலுக்குள் வந்திருக்கும் தகவல் பரவிவிட்டது.

கோவிலுக்குள்ளும், வெளியேயும் நின்ற பக்தர்கள் ஆவேசமாக நயன்தாராவை சூழ்ந்தார்கள். சுடிதார் அணிந்து எப்படி கோவிலுக்குள் வரலாம்? என்று நயன்தாராவிடம் பக்தர்கள் வாக்குவாதம் செய்தார்கள். அவர்களுடன் நயன்தாராவும் வாக்குவாதம் செய்தார்.

அதைத்தொடர்ந்து அவரை வெளியில் போகவிடாமல், கோவிலுக்குள்ளேயே சிறை வைத்தார்கள். மேலும் படிக்க

சிங்கள ராணுவம், மீண்டும் வெறித்தாக்குதல் 180 தமிழர்கள் பலி

ஜெயலலிதாவுக்கு செசன்சு கோர்ட்டு சம்மன்: ஜுன் மாதம் 2-ந் தேதி ஆஜராக வேண்டும்


தமிழ் உலகம் மடற்குழுவில் ஈழத் தமிழர்களுக்கான கூட்டு பிரார்த்தனை

Tuesday, April 14, 2009

சாமியாரால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் புளியமரத்து செட் என்னும் இடத்தில் ஷீரடி சாய்பாபாவுக்கு கோவில் கட்டி, அதன் அருகிலேயே ஆசிரமம் நடத்தி வருபவர், சாமியார் அசோக்ஜி.

இவர் முக்கியமானவர்களுக்கு மட்டும் மந்திரம் மூலம் விபூதி வரவழைத்து ஜோசியம் சொல்லி வந்தார். முக்கிய போலீஸ் அதிகாரிகளுடனும் சாமியார் அசோக்ஜிக்கு தொடர்பு உள்ளது. இவருக்கு பல பெண்களுடன் திருமணம் ஆனதாக கூறப்படுகிறது.

கொடைக்கானல் ஏரிச்சாலையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் செல்வம், அசோக்ஜியின் சீடர். இவருடைய வீட்டுக்கு சாமியார் அசோக்ஜி வந்தபோது, கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வரும் செல்வத்தின் மகள் சுதா(வயது 18)வுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தனது மகள் சுதாவை திருமணம் செய்வதாக கூறி சாமியார் அசோக்ஜி கடத்திச் சென்று விட்டதாக, கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுதா, செல்போனில் போலீசாரை தொடர்பு கொண்டு, `என்னை யாரும் கடத்தவில்லை. நானாகத்தான் வந்தேன்' என்றார். தொடர்ந்து அவரிடம் பேசிய போலீசார், சுதாவுக்கு அறிவுரைகள் வழங்கியதோடு, வத்தலக்குண்டு போலீசில் ஆஜராகுமாறு தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை ஆஜராவதாக போலீசாரிடம் தெரிவித்த சுதா, போனை வைத்துவிட்டார். மேலும் படிக்க

சென்னையில் நாளை நடைபெறவுள்ள போலீஸ் குடும்ப பேரணிக்கு மீண்டும் தடை

தேர்தலில் ரஜினிகாந்த் படத்தை பயன்படுத்த ரசிகர்களுக்கு தடை

Monday, April 13, 2009

கூலிப்படைக்கு ரூ.5 லட்சம் கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி

சென்னை கொளத்தூர் ஜெயராம்நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இவர் பாங்க் ஆப் பரோடாவில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 29-ந் தேதி மகள்களை பார்க்க வந்த சீனிவாசன், திருச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த போது மர்மமான முறையில் செத்துக்கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவரது மனைவியே கூலிப்படைக்கு பணம் கொடுத்து சீனிவாசனை கொலை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக விஜயலட்சுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யா என்கிற சத்யா நாராயணன் (32), மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் (24), புதுச்சேரி நரசிம்மன் (20) ஆகிய 3 பேரையும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- மேலும் படிக்க

நடிகர் விஜய் ஆதரவு எந்த கட்சிக்கு?

போர் நிறுத்தத்தை மீறி இலங்கை ராணுவம் தாக்குதல்

Sunday, April 12, 2009

பங்கி ஜம்ப்' விளையாட்டில் பரிதாபம் சென்னை என்ஜினீயர் பலி



பெங்களூரில் `பங்கி ஜம்ப்' சாகச விளையாட்டு விளையாடிய சென்னை மரைன் என்ஜினீயர் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் அறுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன், வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மூத்த மகன் பார்கவ் (வயது 23), மரைன் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட இவர் `பங்கி ஜம்ப்' என்ற சாகச விளையாட்டு பற்றி இன்டர்நெட் மூலமாக தெரிந்து கொண்டார்.

கால் மற்றும் இடுப்பில் பெல்ட் கட்டிக்கொண்டு மிகவும் உயரமான இடத்தில் இருந்து குதித்து விளையாடுவதுதான் `பங்கி ஜம்ப்'. மரைன் என்ஜினீயரான பார்கவ் கப்பலில் தன்னுடன் பணியாற்றிய 20 நண்பர்களுடன் சேர்ந்து பங்கி ஜம்ப் விளையாட திட்டமிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் அவர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள ஒரு `பங்கி ஜம்ப்' விளையாட்டு மையத்திற்கு சென்றனர். பங்கி ஜம்ப் விளையாட்டில் முதலில் பெல்ட் அணிந்து கொண்டு உயரமான இடத்தில் இருந்து கீழே குதிப்பார்கள். பின்னர் கீழே இருந்து மெல்ல மேலே கிரேன் மூலம் தூக்கப்படுவார்கள்.

பார்கவ் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் முதல்கட்டமான மேலே இருந்து கீழே குதிப்பதை வெற்றிகரமாக முடித்தார்கள். தான் முதல்முதலாக பங்கி ஜம்ப் விளையாட்டில் 200 அடி உயரத்தில் இருந்து கீழே சாகசமாக குதித்த செய்தியை சென்னையில் உள்ள தனது தாய்க்கு போன் மூலம் பர்கவ் தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.

இந்த நிலையில், பங்கி ஜம்ப் விளையாட்டில் அடுத்த கட்டமான கீழே இருந்து மெல்ல மெல்ல பெல்ட்டில் தொங்கியவாறு செல்ல பர்கவ் மற்றும் அவரது நண்பர்கள் தயாரானார்கள்.

தனது நண்பர் ஒருவரின் வாய்ப்பு வந்தபோது அவர் விளையாட விரும்பாததால் பார்கவ் விளையாட முன்வந்தார். இதற்காக இடுப்பிலும், கால்களிலும் பாதுகாப்பு பெல்ட்டுகளை கட்டிக்கொண்டு விளையாட தயாரானார்.

200 அடி உயரத்தில் கயிற்றால் கட்டப்பட்ட கிரேன் மூலம் மெல்ல மெல்ல மேலே சென்றுகொண்டிருந்தார். அவர் வெற்றிகரமாக சென்ற காட்சியை பார்த்து நண்பர்கள் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தனர். மேலும் படிக்க

லண்டன் : இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 2 லட்சம் பேர் ஊர்வலமாக சென்றனர்.

தமிழக சட்டசபைக்கு இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வரும் டாக்டர் ராமதாஸ் பேட்டி

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2100 பேர் அதிரடி நீக்கம்





உலகில் குறைந்த அளவு பணியாளர்களை நீக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இன்ஃபோசிஸை போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்ட அடுத்த நாளே, அந்நிறுவனம் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

வேலைத் திறன் சரியில்லை என்று கூறி இந்தியாவில் மட்டும் 2100 பேரை நீக்கியுள்ளது இன்ஃபோசிஸ். மேலும் படிக்க

Saturday, April 11, 2009

நடிகர் விவேக் மனைவி மீது பிரபல தமிழ் எழுத்தாளர் போலீசில் புகார்

வீட்டை காலி செய்யும்படி ரவுடிகளுடன் வந்து மிரட்டுவதாக சிரிப்பு நடிகர் விவேக்கின் மனைவி மீது பிரபல தமிழ் எழுத்தாளர் சுப்ரஜா போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் அவர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் சினிமா நடிகர் விவேக் வீட்டில் கடந்த 4 1/2 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். வீட்டை காலி செய்யும்படி கடந்த மார்ச் மாதம் விவேக் சில ரவுடிகளுடன் வந்து என்னை மிரட்டினார். இதுகுறித்து நான் ஏற்கனவே கொடுத்த புகார் மீது விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் 11-ந் தேதி (நேற்று) நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு விவேக்கின் மனைவி அருள்செல்வி, வக்கீல் மற்றும் சில முகம் தெரியாத ரவுடிகள் வந்து எனது மகனை பிடித்து வெளியே தள்ளினர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்து புகைப்படங்கள் எடுத்தனர். மேலும் படிக்க

போர் பகுதியில் சிக்கி தவிக்கும் தமிழர்களை காப்பாற்றுங்கள் இலங்கையிடம் அமெரிக்கா வற்புறுத்தல்


வாய்ஸ் கொடுக்கும் விஜயகாந்த்

Friday, April 10, 2009

ஆடை அலங்கார அணிவகுப்பில் `பேன்ட் பட்டனை' கழற்றிய இந்தி நடிகை டுவிங்கிள் கன்னா கைது

ஆடை அலங்கார அணிவகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, இந்தி நடிகை டுவிங்கிள் கன்னா கைது செய்யப்பட்டார். அவருடைய கணவர் அக்ஷய் கன்னாவும் இந்த வழக்கில் கைது செய்யப்படுகிறார்.

மும்பையில் கடந்த வாரம் நடைபெற்ற `லேக்மி' ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், இந்தி நடிகர் அக்ஷய் கன்னாவும் அவருடைய மனைவி டுவிங்கிள் கன்னாவும் பங்கேற்றனர். மேடையில் ஒயிலாக நடந்து வந்த அக்ஷய் கன்னா, முன்வரிசையில் அமர்ந்து இருந்த அவருடைய மனைவி டுவிங்கிள் அருகே வந்ததும், திடீரென நின்றார்.

பின்னர் மனைவியை பார்த்து தனது `பேன்ட் பட்டனை' கழற்றும்படி கேட்டுக்கொண்டார். உடனே டுவிங்கிளும் பலத்த மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு இடையே கணவரின் பேன்ட் பட்டனை கழற்றத் தொடங்கினார். மேலும் படிக்க

உயிருக்கு போராடும் 1 லட்சம் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் அதிபர் ராஜபக்சேவிடம் ஐ.நா.சபை தலைவர் வலியுறுத்தல்.

முதல்வரின் விருப்பம் விஷமத்தனமானது: நெடுமாறன் குற்றச்சாட்டு

Thursday, April 9, 2009

ஒபாமா கொலை செய்யப்படலாம்?

'அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஏகாதிபத்திய இருட்டில் முளைத்த நம்பிக்கை ஒளி' என்று லிபியா அதிபர் கடாபி பாராட்டினார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ஆனால் அவர் வாழ விடமாட்டார்கள். கென்னடி, ஆபிரகாம் லிங்கன் ஆகியோரை கொன்றது போல அவரை கொலை செய்துவிடுவார்கள் என்று அச்சப்படுகிறேன்'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஒபாமாவை கொல்ல யார் சதி செய்கிறார்கள்? மேலும் படிக்க

பிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும்: கருணாநிதி

வைகோ மீது போலீஸ் வழக்குப் பதிவு

Wednesday, April 8, 2009

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன்கோவில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. 5 லட்சம் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புராண சிறப்புகளையும் வரலாற்று பெருமைகளையும் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. ரூ.12 கோடி செலவில் அனைத்து கோபுரங்கள், சன்னதிகள், பிரகாரங்கள் மற்றும் மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. சுவாமி சன்னதி தங்கவிமானம் புதுப்பிக்கப்பட்டதோடு, அம்மன் சன்னதி விமானத்தில் புதிதாக தங்கத்தகடு பதிக்கப்பட்டது.

இதனை அடுத்து கடந்த மாதம் 26-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. மேலும் படிக்க

இலங்கை ராணுவம் உச்சகட்ட தாக்குதல்

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி லண்டன் பாராளுமன்றம் முன்பு முற்றுகையில் ஈடுபட்ட 9 பேர் கைது

Tuesday, April 7, 2009

உடலுறவில் குறைபாடா? இன்பத்தை அதிகரிக்கும் புதிய மூலிகை லேகியம் : டாம்ப்கால் அறிமுகம்

ஆண்களுக்கு வலுவூட்டும் புதிய மூலிகை லேகியத்தை தமிழக அரசு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்), ஒரு தமிழக அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாம்ப்கால் நிறுவனம் இதுவரை, ஹேர் ஆயில், பல்பொடி, இறுமல் டானிக் மற்றும் ஜீரணம், அல்சர், மூட்டு வலியைக் குணப்படுத்தும் மூலிகை பவுடர், லேகியம், மருந்து மாத்திரைகள் என்று 7 தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.

டாம்ப்கால் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு `லபூப் சகீர்' என்ற ஆண்மையை பெருக்கும் மூலிகை லேகியம் புதிதாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கலந்துகொண்டு, ஆண்மைப் பெருக்கி மூலிகை லேகியத்தை வெளியிட்டார். அதனை டாம்ப்கால் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.காத்ரி பெற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து வி.கே.சுப்புராஜ் பேசியதாவது:-

இந்த லேகியம், பல்வேறு மூலிகைகள், உலர்ந்த பழவகைகள், விதைகள், சிறந்த மூலிகை வேர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இது அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக உடலுறவில் குறைபாடு உடையவர்களுக்கு மேலும் படிக்க

இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு லண்டன் தமிழர்களின் முற்றுகை 2-வது நாளாக நீடிப்பு இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தல்

பா.சிதம்பரம் மீது ஷூ வீச்சு

Monday, April 6, 2009

11 பேரை ஏமாற்றி மணந்த பெங்களூர் அழகி




பணத்துக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து 11 பேரை மணந்து கோடிக்கணக்கில் நகை, பணத்தை சுருட்டிய பெங்களூர் அழகியை போலீசார் கைது செய்தனர்.

இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு-

பெயர் கவுசர் பேகம். வயது 26. பார்ப்பதற்கு சினிமா நட்சத்திரம் போல அழகாக இருப்பார். இவருக்கு உம்மே கவுசர், கவுசர் சல்மா என்ற புனை பெயர்களும் உண்டு. பெங்களூர் எச்.பி.ஆர். லே அவுட் 2-வது பிளாக்கில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதிலேயே கல்யாண மோசடியை ஆரம்பித்து விட்டார். இதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக இருந்தனர்.

கவுசர் பேகத்துக்கு மும்பை ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கவுசரின் போட்டோக்கள் அடங்கிய ஆல்பம் இருக்கும். அந்த படங்களில் பெற்றோருடன் சேர்ந்து கவுசர் அடக்க ஒடுக்கமாக கல்லூரி மாணவி போல போஸ் கொடுத்து இருப்பார். திருமணத்துக்கு பெண் பார்த்துக்கொண்டு இருக்கும் தொழில் அதிபர்களை கவுசரின் ஏஜெண்டுகள் சந்தித்து, ``இந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்''. வசதி குறைவுதான் என்றாலும் உங்களுக்கு பிடித்து இருந்தால் பேசி முடிக்கலாம் என்று சொல்வார்கள்.

கவுசரின் போட்டோவை பார்த்தவுடனேயே மயங்கி போய்விடும் தொழில் அதிபர்கள் கவுசரின் ஏஜெண்டுகள் விரிக்கும் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். ``பணம் என்னய்யா பணம் இப்படிப்பட்ட அழகியைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் உடனே பேசி முடி'' என்று உடனே பச்சைக்கொடி காட்டுவார்கள். அடுத்த சில நாட்களில் திருமண விழா அமர்க்களமாக நடந்து முடியும்.

புதிய கணவருடன் கவுசர் தேனிலவுக்கு செல்வார். நாட்கள் இன்பமாக கழியும். கவுசரின் அன்பில் உருகிப்போகும் கணவர், பணத்தை தண்ணீராக செலவழித்து நகைகள், விலை உயர்ந்த துணிகள் என்று கேட்டதையெல்லாம் வாங்கிக்குவிப்பார். மனைவியை நடமாடும் நகைக்கடையாக மாற்றுவார்.

ஒரு நாள் காட்சி மாறும். கணவர் ஆபீசுக்கு சென்று இருக்கும் நேரத்தில் நகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் ரொக்கப்பணத்தை ஒட்டுமொத்தமாக சுருட்டிக்கொண்டு கவுசர் அம்மா வீட்டுக்கு ஓடி விடுவார். அதோடு இந்த நாடகம் முடிந்து விடாது. மேலும் படிக்க

வருண் காந்தியை ரோலர் ஏற்றி கொன்றிருப்பேன்: லாலு பிரசாத் ஆவேசப் பேச்சு

சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சி பெண்

Sunday, April 5, 2009

நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல்

நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல் ஜெர்மனியில் திறக்கப்பட இருக்கிறது. இந்த ஓட்டலில் தங்கவேண்டுமானால் உடை உடுத்தி இருப்பவர்கள் அனைவரும் வரவேற்பு அறையிலேயே தங்கள் உடைகளை களைந்து விடவேண்டும். எப்போதும் நிர்வாணமாக தான் இருக்கவேண்டும். ஓட்டலில் தங்கி இருக்கும் போது எப்போதாவது உடை உடுத்தி இருந்ததை ஓட்டல் பணியாளர்கள் பார்த்துவிட்டால் உடனே அவர்களை ஓட்டலை காலி செய்து கொண்டு செல்லும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். மேலும் படிக்க......

அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம் இல்லை மனிதநேய மக்கள் கட்சி சேர வாய்ப்பு


சென்னை எண்ணூர் அருகே பயங்கரம் கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் மூழ்கினார்கள்

Thursday, April 2, 2009

கணவன்-மனைவி இடையே செக்ஸ் ஒப்பந்தம்

ஆங்காங்கில் உள்ள தொழில் அதிபர் பேட்ரிக் டாங். 66 வயதான டாங் காலணி உற்பத்தியில் புகழ் பெற்றவர். இதனால் இவர் காலணிகளின் மன்னர் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு 39 வயதான கரேன் லீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர், லீயுடன் என்னை தவிர வேறு யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று செக்ஸ் ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் லீயின் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை விலைக்கு வாங்கினார்.

இந்த தம்பதிகளுக்கு 2004-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் லீ, ஆங்காங் ஆணழகனாக தேர்ந்து எடுக்கப்பட்ட 23 வயது வோங்க் செய்யுங் என்பவருடன் கடந்த சில மாதங்களாக உறவு வைத்துக்கொண்டு இருந்தார். இதனால் ஒப்பந்தம் முறிந்து விட்டது என்று கூறிய டாங், தான் வாங்கிய லீயின் சொத்துக்களை திரும்ப எடுத்துக்கொண்டு பணத்தை தரும்படி கேட்கிறார். இதற்காக அவர் லீ மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல்

திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...