Thursday, April 23, 2009

சோனியா, மன்மோகன் ஆகியோர் ஓட்டுக் கேட்டு தமிழகம் வரக்கூடாது: தமிழ் திரையுலகம் எச்சரிக்கை

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் திரையுலகம், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலையை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.

இப்போராட்டத்தில்.... மேலும் படிக்க

Related post



3 comments:

  1. ப்ரியங்கா பிரபாகரன் ஒரு குற்றவாளி ,அவருக்கு மன்னிப்பு கிடையாது என்கிறார்.
    ராஜிவ் காந்தி கொல்லபட்டதில் பல சந்தேகங்கள் உள்ளன்.அக்கட்சியை சேர்ந்தவர்கள் மீது கூட சந்தேகம் எழுந்துள்ளது விசாரணையில்.
    பிராபகரன் என்ற தனி மனிதன் மீது சந்தேகம் கொண்டு இந்தியா இந்த போரை ஆதரிக்கிறது.
    இது வெட்ட வெளிச்சம்.
    அப்படியே ,பிரபாகரன் குற்றவாளி என்று வைத்து கொண்டாலும்.ஒரு தனி மனிதனை அழிப்பதற்க்காக ,சோனியாகாந்தியும் காங்கிரஸும் ஆயுத உதவி வழங்கி பல்லாயிரம் அப்பாவி ஈழ தமிழர்களை கொன்று குவிக்கிறது.
    ஆயிரகணக்கான ஈழதமிழ் மக்களை கொன்று ,பிரபாகரனை அழிக்க நினைப்பது எப்படி நியாயமாகும்,
    ஆயிரகணக்கான ஈழ தமிழர்களை குழந்தைகள்,முதியவர்கள்,பெண்கள் என்று பாராமல் கொன்று குவிப்பதற்கு சோனியா காந்தியையும்,ப்ரியங்கா மற்றும் காங்கிரஸையும் யார் மன்னிப்பார்கள்,
    இது என்ன நியாயம்.
    சோனியா காந்தியே நீ உன் கணவரை இழந்ததற்காக ,எத்தனை பெண்கள் தங்கள் ,தாலியை இழக்க வேண்டும்,எத்தனை பெண்கள் தங்கள் குழந்தைகளை இழக்க வேண்டும்,எத்தனை ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் பெற்றோரை இழக்க வேண்டும்,.
    இத்தனை பேரின் இரத்தத்தில் தான் உன் ,வெறி அடங்குமா?
    அத்மட்டுமல்ல,.உன் தனி பட்ட காழ்புணர்ச்சியால் ஈழ தமிழரின் உரிமை போராட்ட்ட்த்தை அல்லவா நீ சிதைத்து விட்டாய்.
    இதை வரலாறு என்றும் மன்னிக்காது


    இப்படி பல்லாயிரம் ஈழதமிழர்களை கொன்று தான் பிரபாகரனை பிடித்து அழிப்பதில் ,டேனியல்ராம்,விஜய் போன்றவர்கள் விரும்புகிறார்களா?

    எத்தனை ஆயிரம் ஈழதமிழர்கள் கொல்லபட்டாலும்,பரவாயில்லை பிரபாகரன் பிடிபட்டு
    அழிக்க வேண்டும் ,இது தான் டேனியல்ராம்,விஜ்ய் உங்கள் கருத்தா?


    புலிகளின் ஈழ தமிழரின் உரிமை போராட்டம்,பிரபாகரன் என்ற தனி மனித வெறுப்பில் ஈழ தமிழர் போராட்டத்தையே அழிக்க பார்க்கிறீகள்.

    காஷ்மீரில் ஒரு திவிரவாதி மறைந்து இருக்கிறான் என்பதற்காக, அவன் மறைந்திருக்கும் கிராமம் முழுவதும் குண்டு வீசி அங்குள்ள அப்பாவி மக்களை கொன்று தான் அந்த தீவிரவாதியை பிடிக்க முயல்வீர்களா?

    ReplyDelete
  2. பாரதிராஜா,தனக்கு வழங்க பட்ட விருதை திருமப கொடுத்துள்ளார்.அதே போல் தமிழகதை சேர்ந்த பல துறை சார்ந்தவர்கள் தங்களுக்கு மத்திய அரசால் வழங்க பட்ட விருதுகளை திரும்ப கொடுத்தால் ,தமிழரின் ஒற்றுமையை இந்தி பேசும் வடநாட்டானுக்கு விளங்கும்.

    சிங்களவன் இலங்கை தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று எண்ணுவது போல்,இந்தியா ,இந்தி பேசுபவனுக்கு தான் சொந்தம் என்று எண்ணுகிறார்கள்,

    அத்னால் தான் தமிழனின் கொரிக்கையை செவி மடுக்காமல் ,ஈழ தமிழனை அழிக்க மத்திய அரசு உதவி செய்கிறது.

    அதுமட்டுமல்ல,தமிழக மீனவர்களை தாக்கி சொல்லும் இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்கிறது.

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தான் அனுப்பினார் என்று சொல்லி அவரை கைது செய்து,ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் இந்திய அரசு ,இலங்கை இராணுவன் ,நம் தமிழ மீனவர்களை கொன்று வருகிறதே,ஆகவே இலங்கை இராணுவத்தின் தளபதியையும் ,அதன் தலைவ்ராக உள்ள அதிபரையும் ஏன் கைது செய்து ,இந்திய அர்சிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏன் கோரவில்லை.

    அதுபோல் ,மும்பை தாக்குதலில் கைதானவன் ,தன்க்கு பாகிஸ்தான் இராணுவம் தான் ஆயுதம் கொடுத்தது ,பயிற்சி கொடுத்தது என்று கூறியுள்ளான்,அதற்க்காக பாகிஸ்தான் இராணுவ தளபதி மற்றும் அந்நாட்டு அதிபரை கைது செய்ய இந்தியா இதுவரை ஏன் முயவில்லை.

    சராசரி மனிதன் கொல்லபட்டால் பரவாயில்லை.ராஜிகாந்தி மட்டும் கொல்லபட்டால் ,கைது என்பீர்கள்.

    மும்ப்பை இறந்தவர்கள் இந்தியர்கள் அல்லவா?தமிழக மீனவர்கள் இந்திய பிரஜை அல்லவா?

    ReplyDelete
  3. காங்கிரஸ் இனி தமிழகத்தில் இருக்க கூடாது.தொண்டன் என்று யாரும் இருக்க கூடாது.காங்கிரஸ் தோற்கடிக்க பட வேண்டும்.

    இன்று இலங்கையில் சொந்த நாட்டிலேயே அகதியாக திரிகிறான் ஈழ தமிழன்,.காரணம் சிங்கள பெரும்பாண்மை மக்கள் இலங்கை தங்களுக்கே சொந்த்ம் என்று எண்ணுவதால்.ஈழதமிழர்களை அங்கிருந்து விரட்டி அகதிகளாக்கி துரத்துகிறான்.

    நாளை இதே நிலை நமக்கும் வரலாம்.இந்தியா,இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று இங்கு ஆளும் வட மாநில அரசியல் வாதிகள் எண்ணூகிறார்கள்,

    இலங்கையில் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை ,நாளை இந்தியாவில் உள்ள தமிழனுக்கும் நாளை ஏற்படலாம்.

    நாம் அணைவரும் இந்தியர் என்றாலும்,நாம் வாழும் நிலபரப்பு நம்முடையது.நாம் தமிழர்கள் ஏதோ வட இந்தியர்களின் தயவில் அவர்கள் இடத்தில் வாழவில்லை.

    இதை அவர்கள் உணர்ந்தால்,நாம் இந்தியராக ஒன்றாக வாழ்வதில் வருத்தம் இல்லை.

    ஆனால்,சிங்களவர்கள் போல் எண்ணினால் ,.அது ஒற்றுமையை பாதிக்கும்.

    ஈழ தமிழன் கேட்பது,அவன் வாழும் நிலபரப்பில் அவன் கலாச்சாரத்தை ,பண்பாட்டை,வாழ்க்கைமுறையை ,மொழியை பின்பற்றி வாழும் உரிமையை தான்.

    அதை சிங்கள அரசு எப்படி மறுக்க முடியும்.

    சிங்கள வன்முறையாளர்களுக்கு ஆதரவு தரும் சோனியாகாந்தி,தமிழகத்திற்கு வந்தால் எதிர்ப்போம்.காங்கிரஸை தோற்க்டிப்போம்.

    தமிழன் மானம் காப்போம்.நாம் இந்தியர் என்றாலும்,தமிழர்.அதை வட இந்தியனுக்கு புரியவைப்போம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...