Saturday, April 25, 2009

இடம்பெயர்ந்த தமிழர்கள் மீது குண்டுத்தாக்குதல்: 174 பேர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 174 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக், கிபீர், எஃப்-7 ரக வானூர்திகள் இணைந்து குண்டுத் தாக்குதலை நடத்தின.

20 நிமிடம் வரை நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதலின் போது 16 குண்டுகளை சிறிலங்கா வான்படை வீசியுள்ளது.

இதில் மக்களின் 18 கூடாரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் ஆழிப்பேரலை மீளமைப்பின் போது கட்டிக்கொடுக்கப்பட்ட 6 வீடுகளும் முற்றாக அழிந்துள்ளன.
மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...