Monday, April 13, 2009

கூலிப்படைக்கு ரூ.5 லட்சம் கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி

சென்னை கொளத்தூர் ஜெயராம்நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இவர் பாங்க் ஆப் பரோடாவில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 29-ந் தேதி மகள்களை பார்க்க வந்த சீனிவாசன், திருச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த போது மர்மமான முறையில் செத்துக்கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவரது மனைவியே கூலிப்படைக்கு பணம் கொடுத்து சீனிவாசனை கொலை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக விஜயலட்சுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யா என்கிற சத்யா நாராயணன் (32), மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் (24), புதுச்சேரி நரசிம்மன் (20) ஆகிய 3 பேரையும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- மேலும் படிக்க

நடிகர் விஜய் ஆதரவு எந்த கட்சிக்கு?

போர் நிறுத்தத்தை மீறி இலங்கை ராணுவம் தாக்குதல்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...