தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்), ஒரு தமிழக அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாம்ப்கால் நிறுவனம் இதுவரை, ஹேர் ஆயில், பல்பொடி, இறுமல் டானிக் மற்றும் ஜீரணம், அல்சர், மூட்டு வலியைக் குணப்படுத்தும் மூலிகை பவுடர், லேகியம், மருந்து மாத்திரைகள் என்று 7 தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
டாம்ப்கால் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு `லபூப் சகீர்' என்ற ஆண்மையை பெருக்கும் மூலிகை லேகியம் புதிதாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கலந்துகொண்டு, ஆண்மைப் பெருக்கி மூலிகை லேகியத்தை வெளியிட்டார். அதனை டாம்ப்கால் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.காத்ரி பெற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து வி.கே.சுப்புராஜ் பேசியதாவது:-
இந்த லேகியம், பல்வேறு மூலிகைகள், உலர்ந்த பழவகைகள், விதைகள், சிறந்த மூலிகை வேர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இது அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக உடலுறவில் குறைபாடு உடையவர்களுக்கு மேலும் படிக்க
இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு லண்டன் தமிழர்களின் முற்றுகை 2-வது நாளாக நீடிப்பு இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தல்
பா.சிதம்பரம் மீது ஷூ வீச்சு
No comments:
Post a Comment