கடந்த ஞாயிற்று கிழமை அன்று வீட்டில் ஹரிணியும், அவருடைய மகன் அனிரூத்தும் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கை துப்பு துலக்க அம்பத்தூர் துணைக்கமிஷனர் சமுத்திரபாண்டியன் தலைமையில் தனிப்படையை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் அமைத்து உத்தரவிட்டார்.
இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டனர். படுகொலை செய்யப்பட்ட ஹரிணிக்கு ஏராளமான கடன் தொல்லை இருந்தது. கணவனின் வருமானம் வீட்டு கடன் கட்டகூட போதவில்லை. இதனால் எப்படியாவது எந்த வழியிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஹரிணி முடிவு செய்தார்.
அதன்படி தன்னிடம் உள்ள அழகை முதலீடாக்கி தொழில் அதிபர்கள், வசதி படைத்தவர்கள், 20 வயதில் தொடங்கி 60 வயது வரை வயது வித்தியாசமின்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் ஹரிணி பழக்கம் வைத்திருந்தார். இந்த ஆண் நண்பர்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கி ஊர் சுற்றுவதும், இதில் சில பேருடன் உல்லாசமாக இருப்பதும் என ஒரு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
ஹரிணியின் ஆண் நண்பர்கள் அனைவரையும் கூண்டோடு பிடித்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அயனாவரம் யுனைடெட் இந்தியா காலனியை சேர்ந்த தன்ராஜ் (28) என்ற வாலிபர் மட்டும் போலீஸ் விசாரணைக்கு வரவில்லை.
அவரை தேடிச் சென்று போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது ஹரிணியை யாரென்றே தெரியாது என்று கூறிய அவர் பின்னர் வியாபார விஷயமாக ஹரிணியுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து தன்ராஜ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஹரிணியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் 2 பேரையும் பணத்திற்காக கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
தன்ராஜ் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் ஓட்டேரியில் பிளாஸ்டிக் ஸ்பிரிங் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தேன். நண்பர்கள் மூலம் ஹரிணியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் மணிக்கணக்கில் பேசிக்கொள்வோம். என்னை மட்டுமே அவர் காதலிப்பதாக கூறி வந்ததை நம்பி ஹரிணிக்கு ஏராளமான பணத்தை கொடுத்தேன். அவளை காரில் ஏற்றிக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்தேன். இதனால் தொழிலை கவனிக்காமல் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஹரிணிக்கு என்னை போலவே ஏராளமான பேருடன் பழக்கம் உள்ளது என்பது தெரிய வந்தது. இருப்பினும் அவள் மீது இருக்கும் மோகத்தில் பொறுத்து கொண்டு இருந்தேன். இந்த சூழ்நிலையில் ஹரிணி வீட்டை விற்பதாக கூறினார். ஆகவே பணம் வந்தால் எனக்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டேன். அவளும் தருவதாக கூறியிருந்தாள்.
சம்பவத்தன்று காலை ஹரிணிக்கு பணம் கேட்டு போன் செய்தேன். முதலில் காலை 10 மணிக்கு வரச் சொன்ன அவள், சிறிது நேரத்தில் எனக்கு போன் செய்து வீடு வாங்க வருபவர்கள் ரூ.5 லட்சம் பணத்துடன் வருகிறார்கள். எனவே, 1 மணிக்கு என்னை வரச் சொன்னாள். பகல் 12 மணிக்கு ஆட்டோ மூலம் ஹரிணியின் வீட்டிற்கு போனேன். வீட்டின் கூடத்தில் ஹரிணியின் மகன் அனிரூத் டி.வியில் `போகோ' சேனலை பார்த்துக் கொண்டிருந்தான்.
படுக்கை அறையில் ஹரிணி உடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள். நானும் அந்த அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டேன். மேலும் படிக்க
No comments:
Post a Comment