Friday, November 27, 2009

ரூ.30 ஆயிரம் வரதட்சணை பாக்கி : மணமகன் தலைமறைவு

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், இந்துபூர் பேட்டை மண்டலத்தை சேர்ந்தவர் உக்கால கிருஷ்ணய்யா. இவருடைய மனைவி வெங்கடம்மா. இவர்களுடைய மகள் சந்தோஷ் குமாரி (வயது 24). பி.எஸ்.சி. பி.எட் பட்டதாரியான இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், சென்னை கொளத்தூர் வசந்தம் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த மால கொண்டய்யாவின் மகன் மாலயாத்திரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மாலயாத்திரி மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) வேலை பார்த்து வருகிறார்.

திருமண வரதட்சணையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணமும், 7 சவரன் நகையும் கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். அதற்கு பெண் வீட்டாரும் ஒப்புக்கொண்டனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதை தொடர்ந்து இரு வீட்டாரும் பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் நேற்று காலை இவர்களுடைய திருமணம் நடப்பதாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு அதே திருமண மண்டபத்திலேயே திருமண வரவேற்பு நிகழ்ச்சி `தடபுடல்' விருந்துடன் நடந்தது.

திருமணத்திற்காக பெண் வீட்டார் தரப்பில் 100-க்கும் மேற்பட்டோர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்திருந்தனர். அங்கு வந்த அவர்கள் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணத்தை வரதட்சணையாக மாப்பிள்ளையிடம் கொடுத்தனர். மீதிப்பணத்தை தாலி கட்டும் நேரத்தில் தருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மணமகன் மாலயாத்திரி `திடீரென்று' காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. திருமண முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டே இருந்தது.

Wednesday, November 25, 2009

2-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி 3-வது நாள் Live

இந்தியா - இலங்கை 2-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி 3-வது நாள் Live

`செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதன் மேலும் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தாரா?

காஞ்சீபுரம் `செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதன் மேலும் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தாரா? என்பது குறித்து காஞ்சீபுரத்தில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

காஞ்சீபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன், (வயது 35). இவர் கோவில் கருவறையில் வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்படிக்க

Tuesday, November 24, 2009

காஞ்சீபுரம் செக்ஸ் அர்ச்சகரின் ஆபாச படத்தில் இடம்பெற்ற பெண்கள் தலைமறைவு

காஞ்சீபுரம் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் ஆபாச சி.டி.யில் இடம் பெற்று இருந்த பெண்கள் வீட்டை காலி செய்து விட்டு ஊரை விட்டே ஓட்டம் பிடித்துள்ளனர்.

காஞ்சீபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன். (வயது 35). இவர் கோவில் கருவறையில் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்படிக்க

Monday, November 23, 2009

பெண்களின் படத்தை இணையதள‌த்‌தி‌ல் பரப்பிய மாணவர்கள்

செ‌ன்னை திருவான்மியூரைச் சேர்ந்த க‌விதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் பொறியியல் கல்லூரி மாணவியான இவர் காவ‌ல்துறை ஆணைய‌‌ர் ராஜே‌ந்‌திரனை ச‌ந்‌தி‌த்து புகா‌ர் மனு ஒ‌ன்று கொடு‌த்து‌‌ள்ளா‌ர்.

அதில், யாரோ மர்ம ஆசாமி நான் கல்லுரியில் இருந்து சுற்றுலா சென்ற போது எடுத்த படத்தை இணையதள‌த்‌தி‌ல் வெளியிட்டு தன்னுடைய செல்போன் நம்பரை குறிப்பிட்டு உல்லாசத்துக்கு தயார் என்ற ஆபாச வாசகத்தோடு பரப்பி விட்டுள்ளான். மேலும் படிக்க

இன்று துவங்கும் இந்​தியா-​இலங்கை 2-வது டெஸ்ட் பார்க்க Live Cricket

Saturday, November 21, 2009

கடலூரில் பெண் கற்பழித்துக் கொலை: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

கடலூரில், இளம் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.கடலூர் பச்சையாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் இந்துமதி(19). கடந்த 14ம் தேதி இரவு 7.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்றவர், மர்ம நபரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்துமதியின் செல்போனில், சம்பவத்திற்கு சற்று நேரத்திற்கு முன் பேசிய அவரது காதலன் ராஜ்குமார் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஈருடையான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி இருதயராஜ் (27) ஆகியோர் மீது போலீசார் சந்தேகம் கொண்டனர்.இந்நிலையில், ராஜ்குமார் 15ம் தேதி இரவு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அந்தோணி இருதயராஜை தேடி வந்தனர். அவரை, நேற்று தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

அந்தோணிஇருதயராஜ் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

நான்கு ஆண்டிற்கு முன் எனது பெற்றோர் ஆரோக்கியமேரி (35) என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரோக்கியமேரிக்கு வயது அதிகமாக இருந்ததால், எங்களுக்குள் ஒத்துவரவில்லை. அவர் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர், நான் புதுக்கோட்டைக்கு கரும்பு வெட்டச் சென்றபோது, டெய்ஸி ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். அதனை நான் கண்டித்தும் விடவில்லை. அதனால், நான் விலகி விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பணிபுரிந்த மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். இது மாலதியின் குடும்பத்தாருக்கு தெரியவரவே, தொடர்பை நிறுத்திக் கொள்வோம் எனவும், உறவிற்கு வற்புறுத்த வேண்டாம் என, மாலதி கூறினார்.
மேலும் படிக்க

Friday, November 20, 2009

உதவிக்கரம் நீட்ட வேண்டுகிறோம்!





இவர்கள் பார்வையற்ற மாணவ சகோதரர்கள். (Visually Challenged Students). இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. சென்ற நவம்பர் ஒன்றாம்தேதி வந்திருந்த 180க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் படித்துக் காட்ட தோழமை இல்லாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவலாமே...

மேலதிக விபரங்களுக்கு சொடுக்கவும்

Thursday, November 19, 2009

ரூ.80 ஆயிரத்துக்கு மனைவியை பணயம் வைத்த கணவன்

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவரது மனைவி உஷா (28). இவர்களுக்கு பத்ரி என்ற 4 வயது மகன் இருக்கிறான். பாலாஜி எப்போதும் குடித்துவிட்டு சூதாடுவதையே தொழிலாக வைத்திருந்தார்.
பாலாஜி இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவரிடம் ரூ.45 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத பாலாஜி தனது மனைவி உஷாவை வெங்கடேஷிடம் ரூ.80 ஆயிரத்திற்கு பணயம் வைக்க முன்வந்தார். அதற்கு சம்மதித்த வெங்கடேஷிடம் கடன் போக மீதமுள்ள ரூ.35 ஆயிரத்தை வாங்கிக் கொண்டார். மேலும் படிக்க

கோவில் கருவறையில் எடுத்த ஆபாச காட்சியை நானே பார்த்து ரசிப்பேன் : `செக்ஸ்' அர்ச்சகர் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம்

பொங்கல், கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள்

தங்கம் விலையேற்றம் ஒரு பார்வை

இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி

Tuesday, November 17, 2009

பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்

பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண், திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.


திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்.இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார். வேறு ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த பாதிரியார், அதன்பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார். மேலும் படிக்க

Monday, November 16, 2009

கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காஞ்சீபுரம் அர்ச்சகர் கோர்ட்டில் சரண்

கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்ட காஞ்சீபுரத்தை சேர்ந்த அர்ச்சகர், கோர்ட்டில் சரண் அடைந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் (வயது35). இவர் காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்தார். கோவில் கருவறையில் பல பெண்களுடன் அவர் `செக்ஸ் லீலை'களில் ஈடுபட்ட ஆபாச காட்சிகள் வெளியானதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில், காஞ்சீபுரம் துணை சூப்பிரண்டு கு.சமுத்திரகனி, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன், பெண் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த தேவநாதன் தலைமறைவாகிவிட்டார். முன் ஜாமீன் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அவர் போலீசாரிடம் சிக்காமல் `டிமிக்கி' கொடுத்து வந்தார். மேலும் படிக்க

Friday, November 13, 2009

காஞ்சீபுரம் கோவிலுக்குள் நடந்த அர்ச்சகரின் செக்ஸ் லீலை: செல்போனில் வேகமாக பரவும் ஆபாச காட்சிகள்

காஞ்சீபுரம் கோவிலுக்குள் அர்ச்சகர் செய்யும் செக்ஸ் லீலை ஆபாச காட்சிகள், தமிழகம் முழுவதும் செல்போனில் வேகமாக பரவி வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் (வயது35). இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவர் ஒரு பெண்ணிடம் கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபடும் ஆபாச காட்சிகள் முதல், முதலில் காஞ்சீபுரத்தில் வெளியானது.
வீடியோ காட்சி

பரீட்சை நேரத்தில் குழந்தைகளை பிரசவித்த ஆரம்ப பாடசாலை மாணவிகள்

இரு ஆரம்ப பாடசாலை மாணவிகள் பரீட்சையின்போது பிரசவ வலி கண்டு குழந்தைகளைப் பிரசவித்த பின், பிற்பகல் இடம்பெற்ற பரீட்சைகளை தொடர்ந்து எழுதிய சம்பவம் உகண்டா மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முதல் சம்பவம் உகண்டாவிலுள்ள ஜொஷுவா மமாலி எனும் இடத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் படிக்க

Tuesday, November 10, 2009

2 1/2 அடி உயர குள்ளப்பெண் கற்பழிப்பு : அரசியல் பிரமுகர் மீது குற்றச்சாட்டு

சென்னை போலீஸ் கமிஷனரிடம், 6 மாத கர்ப்பிணி குள்ளப்பெண் ஒருவர் உருக்கமான புகார் மனு ஒன்றை கொடுத்தார். தன்னை சீரழித்த அரசியில் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ராஜாஅண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 28). அவர் நேற்று காலையில் தனது வயதான தாய்-தந்தையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். 2 1/2 அடி உயர குள்ளமான அவர் தனது நெஞ்சில் நிறைய சோகத்தையும், வயிற்றில் 6 மாத குழந்தையையும் சுமந்து வந்திருந்தார். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அவர் கண்ணீர் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அவர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:- மேலும் படிக்க

Monday, November 9, 2009

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து பிணத்தின் அருகில் உல்லாசம்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து கணவன் பிணத்தின் அருகிலேயே உல்லாசமாக இருந்ததாக மனைவி வாக்குமூலம். இது பற்றிய விபரம் வருமாறு :-

ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (வயது 38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32) இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் 26-ந் தேதி சுதாகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஷீலா ஆவடி போலீஸ் நிலையத்திற்கு அதிகாலை 3 மணிக்கு போன் செய்து எனது கணவர் சுதாகரை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு போகும் போது வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றதாக கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சுதாகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சுதாகர் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

பிணத்தை மனைவியிடம் ஒப்படைத்த போலீசார் இறுதிச் சடங்கு முடியும் வரை மவுனம் காத்தனர். எனினும், சுதாகரின் மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஷீலா அதிகநேரம் செல் போனில் யாரோ ஒருவருடன் பேசுவது தெரியவந்தது. உஷாரான போலீசார் ஷீலா உபயோகப்படுத்தும் செல்போனின் விவரங்களை சேகரித்தனர்.

அதில், தினமும் இரவில் மணிக்கணக்கில் ராஜேஷ் (24) என்பவருடன் அவர் பேசியது தெரியவந்தது.

ராஜேஷை பற்றி விசாரித்த போது, அவர் சுதாகரின் அக்காள் மகன் என்பதும் அவனுக்கு சுதாகர் கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது. பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சிணை காரணமாக காரை திரும்ப வாங்கிக் கொண்டு சுதாகர் அவனை துரத்தியதும் விசாரணையில் தெரிந்தது. மேலும் படிக்க

Wednesday, November 4, 2009

சேலம் பெண்கள் சிறை காவலர் கற்பழித்து கொலை ; கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் விபரீதம்

சேலம் சிறை காவலாக பணிபுரிந்த பெண் போலீஸ் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். ஜெயிலில், ஆயுள்தண்டனை கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக (போலீஸ்) பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (வயது 33). கோவையை சேர்ந்தவர். காயத்ரி மாலாவுக்கும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள். கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, 8 மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் காயத்ரி மாலா வசித்து வந்தார்.

கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த காயத்ரி மாலா, அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கோவைக்கு செல்லவில்லை. திடீரென்று மாயமான அவருடைய செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
மேலும் படிக்க

கள்ளக்காதலனின் திருமணத்தை தடுக்க `கொடூர' சதி அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கைது

கள்ளக்காதலனின் திருமணத்தை தடுக்க அவருக்கு நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண்ணை கடத்திச்சென்று எச்.ஐ.வி., கிருமியை ஊசி மூலம் செலுத்தி கொல்ல முயற்சி செய்த பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் ராஜகுமாரி (வயது 32). இவருடைய கணவர் பெயர் நடேசன். இவர்கள் திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தில் வசித்து வருகின்றனர்.

ராஜகுமாரிக்கும் குமாரமதீஸ்வரன் (வயது 23) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...