காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் (வயது35). இவர் காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்தார். கோவில் கருவறையில் பல பெண்களுடன் அவர் `செக்ஸ் லீலை'களில் ஈடுபட்ட ஆபாச காட்சிகள் வெளியானதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில், காஞ்சீபுரம் துணை சூப்பிரண்டு கு.சமுத்திரகனி, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன், பெண் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த தேவநாதன் தலைமறைவாகிவிட்டார். முன் ஜாமீன் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அவர் போலீசாரிடம் சிக்காமல் `டிமிக்கி' கொடுத்து வந்தார். மேலும் படிக்க
No comments:
Post a Comment