Tuesday, June 30, 2009

புல‌ம்பெய‌ர்ந்தும் த‌மிழ் வ‌ள‌ர்க்கும் செம்ம‌ல்க‌ள் நேர்காணல்- ஆல்பர்ட்

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்"
இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு
தமிழறிஞரா? இல்லை!

வடநாட்டு அறிஞரா? இல்லவே இல்லை!

சொன்னவர் அமெரிக்க மொழியியல்
ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்!

"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்"
என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி உயிர் துறந்த
தமிழ்பற்றாளர் யார் தெரியுமா?

தமிழகத்தில் பிறந்த தவத்திரு
தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை!

"என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல்,
'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று நீங்கள் எழுத வேண்டும்'
என்று 1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.

இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை
தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில்
சொல்லிவைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன்
மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச்
செதுக்கிவைக்கச் சொன்ன தமிழ் மாணவன்!

இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர்
வரிசையில் இன்றைக்கு வாழும்வரலாறாக‌...இலண்டன் பல்கலைக்கழகக்
கல்லூரியான கோல்ட் ஸ்மித் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும்
பேரா.சிவாபிள்ளை அவர்களை புலம்பெயர்ந்தும் தமிழ் வளர்க்கும் செம்மல்கள்
வரிசையில் முதலாவதாக தமிழ் குறிஞ்சி இணைய இதழுக்காக நிகழ்த்திய மின்
நேர்காணல்

Monday, June 29, 2009

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம், ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.

அதற்கான யாகசாலை பூஜை கடந்த வெள்ளியன்று இரவு துவங்கியது. தினமும் காலை, மாலையில் நடக்கும் யாகசாலை பூஜைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நேரடி ஒளிபரப்பைப் பார்க்க

Sunday, June 28, 2009

சென்னையில் : ஓரினசேர்க்கையாளர்கள், அரவாணிகளின் பேரணி



1969-ம் ஆண்டு ஜுன் 29-ந் தேதி அமெரிக்காவின் நிïயார்க் நகரில் மாற்றுப் பாலியல் கொண்ட மக்கள் புரட்சி ஒன்றைத் தொடங்கினார்கள். `ஸ்டோன்வால் இன்' என்ற இடத்தில் போலீசாரின் வன்முறையை எதிர்த்து இந்தப் புரட்சி நடந்தது. இதை நினைவு கூறும் வகையில் பல்வேறு இடங்களில் ஓரின சேர்க்கையாளர்கள் பேரணி நடைபெற்றது.

சென்னையில் முதன்முறையாக ஓரினசேர்க்கையாளர்கள், அரவாணிகள், இருபாலின ஈர்பëபாளர்கள், அவர்களை ஆதரிப்பவர்கள் ஆகியோர் `சென்னை வானவில்' என்ற பெயரில் நேற்று பேரணி நடத்தினார்கள்.

மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை இந்தப் பேரணி நடந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் `சென்னை வானவில் பேரணி' என்ற பேனரையும், மாற்றுப் பாலியல் கொண்டவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த `கவிஞர் கனிமொழிக்கு நன்றி தெரிவிக்கும்' பேனரையும் எடுத்து வந்தனர். மேலும் படிக்க

Saturday, June 27, 2009

இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு தடை நீங்குமா?

இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இ.பி.கோ.377-வது பிரிவுப்படி, ஓரின சேர்க்கை குற்றம் ஆகும். இதன்படி, ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஓரின சேர்க்கை மீதான தடையை நீக்க, அப்போதைய மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அப்போதைய மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார். மேலும் படிக்க

Friday, June 26, 2009

ராஜபக்சேவுக்கு நேரம் சரியில்லை என்று சொன்ன ஜோதிடர் கைது

இந்தியாவில் மட்டும் இன்றி, இலங்கையிலும் மக்கள் ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். குறிப்பாக அரசியல்வாதிகள் ஜோதிடர்களின் வாக்கை மிகவும் நம்புகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது, பதவி ஏற்பது போன்றவை பற்றி ஜோதிடர்களிடம் கலந்து ஆலோசித்துதான் முடிவு செய்கிறார்கள். எனவே இலங்கையில் ஜோதிடர்களுக்கு மக்களிடையே மிகுந்த மரியாதை உண்டு.

இலங்கையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சந்திரஸ்ரீ பண்டாரா. இவர் பத்திரிகைகளில் ஜோதிடம் எழுதி வருவதோடு, டெலிவிஷன் மற்றும் ரேடியோவிலும் ஜோதிட நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். இவரை இலங்கை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர்.

இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சந்திரஸ்ரீ பண்டாரா; அதிபர் ராஜபக்சேவுக்கு நேரம் சரி இல்லை என்றும் ராஜபக்சேவின் ஆட்சி விரைவில் கவிழும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் படிக்க

Thursday, June 25, 2009

டாக்டரிடம் வழிப்பறி செய்த என்ஜினீயரிங் மாணவர்கள்

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் ராபர்ட். குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சையில் புகழ்பெற்ற டாக்டரான இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். முகப்பேரில் குடும்பத்தோடு வாழ்ந்தார். கடந்த 20-ந் தேதி அன்று ராயப்பேட்டையில் உள்ள நண்பர்களை பார்த்துவிட்டு டாக்டர் ராபர்ட் தனது காரில் வந்து கொண்டிருந்தார். கதீட்ரல் ரோட்டில் அண்ணா மேம்பாலம் அருகே வரும்போது, இன்னொரு காரில் வந்த 4 பேர் வழிமறித்தனர். டாக்டர் ராபர்ட்டை அடித்து உதைத்து அவரிடமிருந்து செல்போன், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொள்ளையடித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். நள்ளிரவு 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இதுதொடர்பாக ராபர்ட் தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். டாக்டரிடம் கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பி சென்றவர்களை கண்டுபிடித்து கைது செய்யும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் தலைமையில் தனி போலீஸ் படையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

டாக்டரிடம் பிடுங்கி சென்ற கிரெடிட் கார்டு மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கினார்கள். கொள்ளையர்கள் குறிப்பிட்ட அந்த கிரெடிட் கார்டு மூலம் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டது தெரிய வந்தது. குறிப்பிட்ட ஓட்டலில் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் 4 பேரும் வந்த காரின் பதிவு எண் தெரிய வந்தது. கார் நம்பரை வைத்து கொள்ளையர்கள் யார் என்று போலீசார் அடையாளம் கண்டனர். மேலும் படிக்க

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பறக்கும் கார்

தமிழர்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : இலங்கைக்கு இந்தியா கண்டிப்பு

Wednesday, June 24, 2009

எடையை குறைத்து, விலையை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளை.

பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் சோப்பு, பிஸ்கட், வாஷிங் பவுடர் ஆகிய பொருட்களின் எடையை குறைத்தது மட்டும் அல்லாமல் விலையையும் உயர்த்தி விற்பனை செய்வதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினார்கள்.

சோப்பு, பவுடர், பிஸ்கெட், சாக்லேட், ஷாம்பு, வாஷிங் பவுடர் உள்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்களை இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் தயார் செய்துவருகிறார்கள். இவர்கள் தயார் செய்யும் பொருட்கள் தரமானதுதானா? எடை சரியாக உள்ளதா? சரியான விலையில் விற்பனை செய்கிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால் இந்த அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் சமீப காலமாக உற்பத்தியாளர்கள் தயார் செய்யும் பொருட்களை கண்காணிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் விற்பனை வரியை மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் உற்பத்திசெய்யும் பொருட்களின் விலையை தங்கள் இஷ்டம் போல உயர்த்துவது பற்றி கொஞ்சம் கூட அதிகாரிகள் கவலைப்படுவது இல்லை. இதனால் வெளிநாட்டு நிறுவனம் தயாரிக்கும் சோப்பு, பிஸ்கெட், பவுடர், சாக்லேட், வாஷிங் பவுடர் போன்ற பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் மாதந்தோறும் உயர்த்தி வருகிறார்கள். மேலும் படிக்க

3 காதலர்களிடம் சிக்கி தவிக்கும் பெண் என்ஜினீயரின் கண்ணீர் கதை

சென்னை அடையாறில் வசிப்பவர் சங்கரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தொழில் அதிபரான இவரது மனைவி மத்திய அரசு அதிகாரியாக உள்ளார். இவரது மகன் என்ஜினீயராக இருக்கிறார். நல்ல வேலையில் கைநிறைய சம்பளம் வாங்குகிறார். மகள் கல்லூரியில் படிக்கிறார். மகனுக்கு திருமணமாகி விட்டது. மகனின் மனைவி காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ஜினீயரிங் படித்துள்ளார். அவரும் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் கம்ப்ïட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அதற்கு ஏற்ப சங்கரனின் குடும்பமும் இருந்தது.

இந்த குடும்பத்தில் கடந்த 11/2 வருடங்களாக பெரும் புயல் வீசியது. சங்கரனின் மனைவி வீட்டில் வைக்கும் பணமும், நகையும் திருட்டு போனது. பீரோவில் மகள் திருமணத்துக்காக ரூ.7 லட்சம் வைத்திருந்தனர். அதில் ரூ.1 லட்சம் திருட்டு போய்விட்டது. ஆனால் பீரோ உடைக்கப்படவில்லை. அதேபோல், சங்கரனின் மனைவியின் 13 சவரன் நகைகளும் மர்மமாக களவாடப்பட்டது. பீரோவில் வைத்தால் திருட்டு போகிறது என்று பூஜை அறையில் நகை, பணத்தை வைத்து பார்த்தார். அங்கும் திருட்டு சம்பவம் நடந்தது.மேலும் படிக்க

Tuesday, June 23, 2009

அடுத்தடுத்து கிரகணங்கள் ஏற்படுவதால் பூமியில் பேரழிவு ஏற்படுமா?

ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து சந்திர கிரகணம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று மூன்று கிரகணங்கள் தோன்றுவதால் பூமியில் பேரழிவு ஏற்படுமா என்ற பீதி கிளம்பியுள்ளது.

வானத்தில் மிகவும் அரிதான காட்சிகள் தோன்றுவது வழக்கம். ஒரே நேர்கோட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் வருவது, பூமிக்கு அருகில் ஏதாவது ஒரு கோள் நெருங்கி வருவது என ஆர்வத்தை தூண்டும் அபூர்வ நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன.

அதுபோல, மற்றொரு அரிய நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஜுலை) மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெற உள்ளது.

அதாவது, ஜுலை 7-ந் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந் தேதி சூரிய கிரகணமும், ஆகஸ்ட் 6-ந் தேதி மீண்டும் ஒரு சந்திர கிரகணமும் தோன்றுகின்றன.

22-ந் தேதி தோன்றும் சூரிய கிரகணத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம். அதிகாலை 5.30 மணிக்கு சூரிய கிரகணம் தோன்றும்.

ஒரு மாத காலத்துக்குள் அடுத்தடுத்து `மூன்று கிரகணங்கள்' தோன்றுவது வானியல் சாஸ்திரத்தில் ஆச்சரியம் அளிக்கும் நிகழ்ச்சி. ஆனால், தொடர்ந்து 3 கிரகணங்கள் தோன்றுவதால் பூமிக்கு பேராபத்து ஏற்படலாம் என்று பீதியை கிளப்புகின்றனர், பெங்களூரைச் சேர்ந்த ஹரி மற்றும் ஹேமா ஹரி என்ற தம்பதியினர். மேலும் படிக்க

`காதல் கதை' படத்தில் நிர்வாண காட்சிகள்

நாளைய மனிதன், அசுரன், கடவுள் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், வேலு பிரபாகரன். இவர் டைரக்டு செய்த புதிய படம், `காதல் அரங்கம்.' இந்த படத்தில் நிர்வாண காட்சிகள் இடம்பெற்று இருந்ததால், தணிக்கை குழுவினரிடம் சிக்கி சில வருடங்களாக தவித்தது.

வேலு பிரபாகரனின் தீவிர போராட்டத்துக்குப்பின், `ஏ' சான்றிதழுடன் அந்த படத்துக்கு விடுதலை கிடைத்து இருக்கிறது. `காதல் அரங்கம்' படம், `காதல் கதை' என்ற பெயர் மாற்றத்துடன் திரைக்கு வர இருக்கிறது.

இதுபற்றி வேலு பிரபாகரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மனம் திறந்து பேசினார்.மேலும் படிக்க

Monday, June 22, 2009

பிரமீட் சாய்மீரா சுவாமிநாதன் கைது

கோர்ட்டில் ஆஜராகாததால் அரியானா கோர்ட்டு பிடி வாரண்ட் பிறப்பித்தது. இதையொட்டி பிரபல சினிமா தயாரிப்பாளர் பிரமீட் சாய்மீரா சுவாமிநாதனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரமீட் சாய்மீராவின் தலைவராக சுவாமிநாதன் இருக்கிறார். இந்த நிறுவனம் ரஜினிகாந்தின் குசேலன் படத்தை தமிழகத்தில் `ரிலீஸ்' செய்தது.

ஒரே நேரத்தில் 10 திரைப்படங்களுக்கு பூஜை போட்டு, தமிழ் திரை உலகத்தில் பாபரப்பை ஏற்படுத்தியவர்கள். பின்னர் இந்த படங்கள் தயாரிக்கப்படவில்லை.

இந்த நிறுவனம் அரியானா மாநிலத்தில் உள்ள பிரபல நிதி நிறுவனத்தில் (இந்தியா புல் நிறுவனம்) கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அரியானா மாநிலம் குர்கான் கோர்ட்டில் பிரமீட் சாய்மீரா சுவாமிநாதன் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க

Sunday, June 21, 2009

கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் வீடியோ காட்சிகள்

மும்பையை அடுத்த மிராரோடு தனியார் கல்லூரி மாணவி ஒருவரை பராக் மாத்ரே என்பவர் காதலித்தார். காதலித்த பெண்ணுடன் அவர் உல்லாசம் அனுபவித்தார். அத்துடன் நிற்காமல் அதை செல்போனில் படம் பிடித்தார்.

அந்த வீடியோக் காட்சிகளை தனது தம்பி பங்கஜ் மாத்ரே மற்றும் சக நண்பர்களுக்கு காட்டி உள்ளார். அதைப் பார்த்த அவர்களுக்கும் அந்த மாணவியை அனுபவிக்கும் ஆசை ஏற்பட்டது. செல்போன் காட்சியை காட்டி பிளாக் மெயில் செய்து அவர்கள் இரு தருணங்களில் அந்த மாணவியை கற்பழித்தனர். பிளாக் மெயில் செய்து, கற்பழிப்பு தொடர்கதை ஆனதில் மாணவி கதி கலங்கிப்போனார். மேலும் படிக்க

இன்டர்நெட் காதலில் ஏமாந்த பிடல் காஸ்ட்ரோ மகன்

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மகன் ஆன்டானியோ, இன்டர்நெட் மூலம் கிடைத்த கொலம்பியா காதலியிடம் ஆறு மாதம் "ஜொள்' விட்டார்; கடைசியில் பார்த்தால், அழகி, அவள் அல்ல; அவன்; ஆம், ஒரு ஆணைத்தான் பெண் என்று போலி படத்தை பார்த்து ஏமாந்துள்ளார்.


எக்குதப்பாக சிக்கி விட்ட கம்யூனிச அதிபர் மகன், இந்த "இன்டர்நெட் ' காதலில் ஏமாந்த விவகாரத்தால், இப்போது சிரிப்பாய் சிரிக்கிறார் சொந்த நாட்டில். கியூபாவில், இன்டர்நெட் பயன்படுத்த கட்டுப்பாடு உள்ளது. அதிலும், இளைஞர் கள் இன்டர்நெட்டில் "சாட்டிங்' செய்ய தடை உள்ளது. ஆனால், ஆன்டானியோவுக்கோ இன்டர்நெட் மீது ஆர்வம் அதிகம். எப்போதும், யாருடனாவது "சாட்டிங்' செய்வார். பெரும்பாலும் பெண்களுடன் தான் "ஜொள்' விட்டபடி இருப்பார். அப்படி சிக்கியவர் தான் கொலம்பியா அழகி என்று சொல்லி, இன்டர்நெட்டில் சேட்டிங் செய்த கிளாடியா வலேசியா. மேலும் படிக்க

Saturday, June 20, 2009

சேகுவாரா பேத்தியின் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்

ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தென் அமெரிக்க மக்களை திரட்டியவர் சேகுவாரா. கியூபா புரட்சிக்கு தளகர்த்தராக இருந்தவர். இவரது பேத்தி லிடியா குவாரா, இவர் இன்னொரு புரட்சிக்கு கொடி பிடித்து இருக்கிறார்.


அவர் சைவ உணவுக்கு ஆதரவான விளம்பரப்புரட்சியில் பங்கு கொண்டு இருக்கிறார்.

மிருகவதை தடுப்பு இயக்கம் உலகம் முழுவதும் விளம்பரங்களை செய்து வருகிறது. இந்த இயக்கம், உணவுக்காக ஆடு மாடுகளை வெட்டுவதையும், உடைக்காக ஆடு, கரடி ஆகியவற்றின் தோல்களை எடுப்பதற்காக அந்த மிருகங்களை கொல்வதையும் எதிர்த்து உலக முழுவதும் புரட்சி விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. மேலும் படிக்க

4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டாக்டருக்கு வலைவீச்சு

இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ விமானம்

Friday, June 19, 2009

குளியல் அறையில் ரகசிய காமிரா

தைவான் நாட்டை சேர்ந்த விமானப்போக்குவரத்து நிறுவனம் ஈவா ஏர். இந்த விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தவர் கிம். 39 வயதான அவர் தைவான் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற விமானத்தில் பணிபுரிந்தார். அப்போது அவர் குளியல் அறையில் சிறிய டிஜிட்டல் காமிராவை பொருத்தி இருந்தார். விமானப்பணிப்பெண்கள் பணிமுடிந்து திரும்பும்போது சீருடையை களைந்து விட்டு வழக்கமான உடைக்கு மாறுவதற்காக குளியல் அறைக்கு சென்று ஆடைகளை களைவதை ரகசியமாக படம் பிடித்தார். மேலும் படிக்க

Thursday, June 18, 2009

பிரபாகரன் வீர மரணம் அடைந்தார் விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவிப்பு

"இலங்கை ராணுவத்துடன் போரிட்டே பிரபாகரன் வீர மரணம் அடைந்தார்'' என்று விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் வெளியகப் பணி பிரிவு புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம ராணுவ தளபதியுமான தமிழீழ தேசிய விடுதலை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப் படுத்தி இருக்கிறது.

தேசிய தலைவர் அவர்களை பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேர சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள், வேறு துறைப் போராளிகள் மற்றும் இலங்கை படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் பிரபாகரனின் வீர சாவை இப்போது உறுதிப்படுத்துகின்றனர். மேலும் படிக்க

ஒரு பெண்ணை மணக்க 400 பேர் போட்டி

தென்கொரியாவில் 49 வயதாகும் பெண் தொழில் அதிபருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளது. எப்போதும் தொழில், தொழில் என்று அலைந்ததால் இவருக்கு உரிய வயதில் திருமணம் நடக்கவில்லை. அவரும் திருமணத்தை பற்றி நினைத்துப் பார்க்காமல் இருந்தார்.

49 வயது நிறைவு பெறும் நிலையில் தனிமையை அவர் உணர்ந்தார். தனக்கு ஒரு துணை தேவை என்ற நினைப்பு தற்போதுதான் வந்தது. உடனடியாக அவர் திருமணம் செய்து கொள்ள ஆண் தேவை என்று ஒரு ஏஜென்சி மூலம் இணையத் தளத்தில் விளம்பரம் கொடுத்தார்.

கோடீசுவர பெண் ஒருவர் வாழ்க்கை துணை தேடுவதை அறிந்ததும் பலரும் போட்டி போட்டு பதில் அனுப்பினார்கள். டாக்டர்கள், வக்கீல்கள், வங்கி ஊழியர்கள் என்று 394 பேர் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தனர். மேலும் படிக்க

Wednesday, June 17, 2009

இணையதளம் மூலம் வலை வீசி ஆயிரம் ஆண்களுடன் உறவு கொண்ட பெண்

இங்கிலாந்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருத்தி, ஆயிரம் ஆண்களுடன் உறவு வைத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அவர் பெயர் எதையும் வெளியிடவில்லை. இந்த ஆயிரம் ஆண்களையும் இணையதளம் மூலம் வலை வீசி பிடித்ததாக சொல்கிறார்.

"எனக்கு சிறுவயதில் இருந்தே செக்ஸ் ஆர்வம் அதிகம். 17 வயதில் முதன்முதலில் ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொண்டேன். மேலும் படிக்க

Tuesday, June 16, 2009

ரோட்டு ஓரத்தில் குடிபோதையில் மயங்கி கிடந்த பாகனுக்கு காவல் நின்ற யானை

கேரளாவில், குடிபோதையில் ரோட்டு ஓரத்தில் மயங்கி கிடந்த பாகனுக்கு அவனது யானை காவலாக நின்றது. பாகனுக்கு பக்கத்தில் யாரையும் நெருங்க விடாமல் விரட்டி அடித்தது.

கேரள மாநிலத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மதம் பிடித்த யானைகள், பாகன்களை தூக்கி போட்டு மிதித்து கொன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன. இந்நிலையில், அதே கேரளாவில் பாகனுக்கு ஒரு யானை விசுவாசமாக காவல் காத்த சம்பவம் நடந்துள்ளது.

திருச்சூர் நகரம் யானைகளுக்கு புகழ் பெற்றது. அங்கு `சந்து' என்ற யானையை பராமரித்து வரும் பாகன், சாலைவழியாக சந்துவை கூட்டிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வழியில் ஒரு கள்ளுக்கடையை பார்த்த பாகனுக்கு கள் குடிக்கும் ஆசை தோன்றியது. எனவே, யானையை ரோட்டு ஓரத்தில் நிறுத்தி விட்டு, கடைக்குள் சென்று ஆசை தீர கள் குடித்தார்.

போதை தலைக்கேறிய நிலையில் கடையை விட்டு வெளியே வந்த பாகனுக்கு மது மயக்கம் ஏற்பட்டது. மேலும் படிக்க

Monday, June 15, 2009

பிரபாகரன் சித்திரவதை செய்து கொல்லப்பட்டாரா? இலங்கை ராணுவ தளபதி மறுப்பு

பிரபாகரனை சிங்கள ராணுவத்தின் 53-வது படைப்பிரிவினர் உயிருடன் பிடித்து சென்று சித்திரவதை செய்து கொன்றதாக வெளியான தகவலை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

வன்னியில் உள்ள நந்தி கடல் கழிமுக பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் தெரிவித்தது. கடந்த மாதம் 18-ந் தேதி அன்று நடந்த சண்டையில் பிரபாகரன் உயிரிழந்ததாகவும் மறுநாள் (19-ந் தேதி) அவரது உடலை நந்தி கடல் பகுதியில் கண்டெடுத்தாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால், சில முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் தப்பிச் சென்று விட்டதாக அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த சூழ்நிலையில் பிரபாகரனை சிங்கள ராணுவம் உயிருடன் பிடித்துச் சென்று ராணுவ தலைமையகத்தில் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து, `யாழ்ப்பாணம் பல்கலை கழக ஆசிரியர்கள் மனித உரிமைகள் அமைப்பு' வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் கிடைத்தன. அதன்படி, பிரபாகரனை சிங்கள ராணுவத்தின் 53-வது படைப் பிரிவினர் உயிருடன் பிடித்துள்ளனர். பின்னர் அந்த படைப்பிரிவின் தலைமை அலுவலகத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் படிக்க

Friday, June 12, 2009

சென்னையில் சாலையில் சிதறிக் கிடந்த தங்க துகள்கள்



சென்னை மதுரவாயலை அடுத்த வேலப்பன்சாவடியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் ரோடு சென்னீர்குப்பம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு தங்க துகள்கள் ரோட்டில் சிதறி கிடப்பதாக நேற்று காலை 11 மணி அளவில் தகவல் பரவியது. தங்க தகடுகளும், தங்க துண்டுகளும் ஆங்காங்கே ரோட்டின் இருபுறமும் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. வருமானவரி சோதனைக்கு பயந்து தங்கத்தை லாரியில் கொண்டுவந்து நடு ரோட்டில் போட்டுவிட்டு போய்விட்டதாகவும் சிலர் பேசிக்கொண்டார்கள்.

இந்த தகவல் பரவிய சிறிது நேரத்தில் மதுரவாயல், வேலப்பன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி, போரூர், திருவேற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கத்தை சேகரித்து அள்ளிச் செல்வதற்காக மூச்சு இரைக்க ரோட்டுக்கு ஓடி வந்தனர்.

இதனால், வேலப்பன்சாவடியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் ரோடு சென்னீர்குப்பம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டில் கூட்டம் அலை மோதியது. பொதுமக்கள் ரோட்டின் ஓரத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த தங்க நிற துகள்களை உண்மையான தங்கம் என்று கருதி எடுத்து மடியிலும், பைகளிலும் போட்டு நிரப்பினார்கள். சிலர் ரோட்டில் கிடந்த மணலை சல்லடை போட்டு அரித்து அதில் கிடைத்த தங்கநிற துகள்களை சேகரித்தனர். ஆரம்பத்தில் காலை 11 மணி அளவில் தங்க வேட்டைக்கு வந்தவர்களுக்கு 20 கிராம் அளவில் தங்க கட்டி போன்ற துகள்கள் கிடைத்தன.

Thursday, June 11, 2009

கள்ளக்காதலனை அடித்து கொலை செய்த பெண்

தஞ்சாவூரை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 48). இவருடைய மனைவி கோமதி. 4 குழந்தைகள் உள்ளன. குழந்தைகளுடன் கோமதி தஞ்சாவூரில் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து வேலை தேடி ஜெயகாந்தன் சென்னை வந்தார். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அங்கேயே படுத்து உறங்குவார்.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அருணா (34) என்ற பெண்ணை ஜெயகாந்தன் சந்தித்தார். இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இந்த பழக்கம் கள்ளக் காதலாக மாறியது. அருணாவுக்கு ஏற்கனவே சவுடய்யா என்பவருடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

ஜெயகாந்தன், அருணா இருவரும் தாலி கட்டிக் கொள்ளாமலேயே கணவன்-மனைவியாக வாழத் தொடங்கினார்கள். சென்னை புறநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை மதுரவாயல் பள்ளிக்குப்பம் ரெட்டியார் அகரம் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்கு குடிவந்தனர். வீட்டு வேலை உள்பட கிடைத்த வேலைக்கு எல்லாம் அருணா சென்று வந்தார்.

வெளியில் ஆண்களுடன் சகஜமாக பேசி பழகுவார்.மேலும் படிக்க

Wednesday, June 10, 2009

நீங்கள் பலான பெண்களைத் தேடிச் செல்பவரா?

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அவர்களை பாதுகாத்துக்கொள்ள கராத்தே பயிற்சி சென்னையில் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாலியல் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் வெளிஉலகுக்கு தெரிந்தவர்கள் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர். பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும்போது அடிதடி தகராறு உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கவேண்டி உள்ளது. எனவே இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட பாலியல் பெண்களுக்கு கராத்தே பயிற்சி அவசியம் என்று சென்னையில் இந்திய சமுதாய நல அமைப்பும், இந்திரா பெண்கள் முன்மாதிரி கல்வியாளர்கள் அமைப்பும் கருதின. மேலும் படிக்க

பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டாரா?: மனித உரிமை அமைப்பு தகவல்

விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ராணுவத்தின் உயர்நிலை தகவல்களை மேற்கோள்காட்டி "மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு தயாரித்துள்ள 48 பக்க அறிக்கை "இந்திய -ஆசிய செய்தி சேவை' நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. மேலும் படிக்க

6 மாத கைக்குழந்தை உருவத்தில் 15 வயது இந்திய சிறுமி

ஜோதி ஆம்கே, 15 வயதாகும் இந்த இந்திய சிறுமியின் பெயர் தற்போது உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஒரு அடி 11 1/2 அங்குல உயரம் மட்டுமே கொண்ட ஜோதி ஆம்கே, உலகிலேயே மிகவும், குள்ளமான சிறுமி என்ற பெயரை பெற்று இருக்கிறார். 6 மாத கைக்குழந்தை போல் பெற்றோர், சகோதர-சகோதரிகளின் இடுப்பில் தொற்றிக் கொள்ளும் இந்த சிறுமியின் எடை வெறும் 6 கிலோதான்.

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரை சேர்ந்த ஆம்கே கிஷன்-ரஞ்சனா தம்பதிகளின் கடைக்குட்டிதான் இவள்.

இந்த தம்பதியினருக்கு பிறந்த அர்ச்சனா(23), சதீஷ்(22), ரூபாலி(18) மூவருமே சராசரி வளர்ச்சியுடன் பிறந்தவர்கள். ஹார்மோன் சுரப்பு கோளாறு காரணமாக ஜோதியின் உயரமோ, உடலோ வயதுக்கு தகுந்த வளர்ச்சியடையாமல் போய்விட்டது. இதனால் பொம்மை போன்ற தோற்றத்தில்தான் அவர் காணப்படுகிறார்.

3 வயதானபோது, தன் வயதையொட்டிய சிறுமிகள் ஆர்வத்துடன் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி போல் பள்ளிக்கூடம் செல்வதை பார்த்த ஜோதிக்கும் அவர்களை போல் தானும், பள்ளிக்கூடத்துக்கு துள்ளிக்குதித்து கொண்டு செல்லும் ஆவல் ஏற்பட்டது. மேலும் படிக்க

ஆங்கிலத்தில் 10 லட்சமாவது வார்த்தையாகும் “ஜெய்ஹோ”: இன்று இரவு அறிவிக்கப்படுகிறது

ஆங்கில வார்த்தைகளை அங்கீகாரம் செய்து நடைமுறைக்கு கொண்டு வரும் அமைப்பு “குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்” அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் உலகின் பல நாடுகளில் இருந்து வெளியாகும் புத்தகங்கள், பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவைகளில் வெளியாகும் புதிய வார்த்தைகளை ஆராய்ந்து அங்கீகரிப்பார்கள்.

இதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட தயாராகி விட்டது.
மேலும் படிக்க

Tuesday, June 9, 2009

கல்லூரி மாணவியுடன் வாலிபர் உல்லாசமாக இருக்கும் 2 நிமிட செல்போன் காட்சி

புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் வாலிபர் உல்லாசமாக இருக்கும் 2 நிமிடம் செல்போன் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுத்து நிறுத்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.டி. கடையில் வேலை பார்த்து வந்த ஒரு இளம் பெண், ராஜா தியேட்டர் சந்திப்பு அருகே செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த வாலிபருடன் ஆபாசமாக இருந்த காட்சி செல்போனில் உலா வந்தது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணுடன் ஆபாசமாக இருந்த கடலூரை சேர்ந்த வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இப்போது புதுச்சேரியில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

புதுச்சேரியை சேர்ந்த பிரபலமான கல்லூரியில் படித்து வருபவர் ஹெலன் (வயது 19)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நவீன வசதி கொண்ட அறைக்குள் ஒரு வாலிபருடன் உள்ளே செல்கிறார். பின்பு அந்த வாலிபர் ஹெலனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். இதை தொடர்ந்து அவர் ஹெலனின் ஆடைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கிறார். மேலும் படிக்க

Monday, June 8, 2009

இந்தியாவில் கொடிகட்டி பறந்த நடிகர் ரஷியாவில் தெருவை பெருக்குகிறார்

மும்பையை சேர்ந்தவர் அர்மன் குமார் ஜா. சில காலத்திற்கு முன்பு பல மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானார். பணம், புகழ், செல்வாக்கு என்று மகிழ்ச்சியில் திளைத்தார். இந்த நேரத்தில்தான் அவரை விதி துரத்த தொடங்கியது.

ரஷியாவில் இருந்து கரோலினா என்ற பெண், இந்திய நடனத்தை பயில்வதற்காக மும்பை வந்தார். நடனம் பயின்று கொண்டிருந்தபோது, அவருக்கும், நாடக நடிகர் அர்மன் குமார் ஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நாடு, மதம், மொழி ஆகியவற்றை தாண்டி தீவிரமாக காதலித்தனர்.

பின்னர், இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு, மும்பையில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினார்கள். ஆனால், கடுமையான குளிர் நாடான ரஷியாவில் வசித்த கரோலினாவால் இந்திய வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர், கணவரை ரஷியாவுக்கு அழைத்தார்.

மனைவியின் அன்பு கட்டளையை மறுக்க முடியாத அர்மன் குமார் ஜா, மும்பையில் தான் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் விற்று பணமாக்கினார். மனைவி கரோலினாவுடன் ரஷியா புறப்பட்டார். ஆனால், பாஸ்போர்ட், விசா என்று, ரஷியாவில் தங்குவதற்கான அனைத்து ஆவணங்களை பெறுவதற்குள்ளாகவே பெரும் பகுதி பணம் காலியாகிவிட்டது.
மேலும் படிக்க

Sunday, June 7, 2009

சென்னையில் துண்டு துண்டாக வெட்டி நகை வியாபாரி படுகொலை


சென்னையில் நகை வியாபாரியை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை 3 தெருக்களில் வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் வீட்டிலேயே ஒரு வேன், ஒருகார் வைத்து விநாயகா டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். அத்துடன் கமிஷனுக்கு நகை விற்றுக் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

பெற்றோர் மற்றும் மனைவி பாரதி, மகன்கள் சரண் (9), சஞ்சய் (4) ஆகி யோருடன் வசித்து வந்தார். மனைவி பாரதி நுங்கம் பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மதியம் 1 மணிக்கு சுரேஷ்குமார் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அதன் பிறகு இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது “சுவிட்ச்” ஆப்செய்யப்பட்டு இருந்தது. காலையில் வந்து விடுவார் என நினைத்து இருந்தனர். காலையிலும் அவர் வர வில்லை. செல்போனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சூளை நடராஜா தியேட்டர் அருகில் உள்ள சட்டண்ணன் தெருவில் இன்று அதிகாலையில் துண்டிக்கப்பட்ட 2 கைகள் பாலித்தீன் பையில் கிடந்தது. பெரியமேடு போலீசார் சென்று 2 கைகளை கைப்பற்றி விசாரித்தனர். இடது கையில் செம்பு மோதிரமும், வலது கையில் சிவப்பு கயிறும் கட்டப்பட்டு இருந்தது.மேலும் படிக்க

Friday, June 5, 2009

365 நாளும் கணவருடன் செக்ஸ் வைத்து அமெரிக்க பெண்மணி சாதனை

அமெரிக்காவில் ஒரு பெண்மணி, தனது கணவருடன் 'கேப்'பே இல்லாமல் 365 நா(நை)ட்கள் 'சேர்ந்திருந்து' புது சாதனை படைத்துள்ளார் -அதை புத்தகமாகவும் வெளியிட்டு கணவருக்குப் பிறந்த நாள் பரிசாக அளித்து அசத்தியுமிருக்கிறார்.

365 nights of sex - இதுதான் அமெரிக்காவைச் சேர்ந்த சார்லா முல்லர் என்ற அந்தப் பெண் எழுதிய புத்தகம். அமெரிக்காவில் அத்தனை பேரும் இந்த புத்தகம் குறித்துதான் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சார்லா முலல்ர் ஒரு பி.ஆர். அதிகாரி. இவரது கணவர்
பிராட். 42 வயதாகும் பிராட், சேல்ஸ்மேன் ஆவார்.

கணவருக்கு பிறந்த நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று யோசித்தபோது தானும், கணவரும் சேர்ந்திருந்த தருணங்களை, இரவுகளை எழுத்து வடிவாக்கி அதை புத்தகமாக கொடுக்கலாம் என முடிவு செய்தாராம் சார்லா.

எப்படி வந்தது இந்த ஐடியா என்று சார்லாவிடம் கேட்டால்... மேலும் படிக்க

2 1/2 அடி உயர வாலிபரை காதலித்து திருமணம் செய்த நர்ஸ்

2 1/2 அடி உயர குள்ள வாலிபரை நர்சு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த ருசிகர காதல் திருமணம் பற்றிய விவரம் வருமாறு:-

கரூர் லைட் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 28). இவர் 21/2 அடி உயரமே உள்ள குள்ளமனிதர். ஆனால் உழைப்பில் உயரமானவர். உடல் குறைபாட்டை பற்றி கவலைப்படாமல் உழைக்கக்கூடியவர். கரூர் தாலுகா அலுவலகம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.

கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்ப்பவர் அருள் கலைச்செல்வி(24). ஒரு முறை இவர் ராஜ்மோகன் பெட்டிக்கடைக்கு வந்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு ராஜ்மோகனின் பெற்றோர் சம்மதித்தனர். ஆனால் அருள் கலைச்செல்வியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. உயரம் குறைந்தவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கண்டித்ததோடு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினர். மேலும் படிக்க

Thursday, June 4, 2009

காதலி உயிரை விட சொன்னதால் நடுரோட்டில் தீக்குளித்த பட்டதாரி வாலிபர் பரிதாப சாவு

சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மெக்கானிக் ஷெட் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவரது மூத்த மகன் சுரேஷ்குமார் (வயது 24). எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சுரேஷ்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வேறு நல்ல வேலைக்கும் முயற்சித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறமுள்ள திருமூர்த்திநகரின் 2-வது ரோட்டிற்கு சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றார். திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றினார். பின்னர் உடலில் தீ வைத்துக்கொண்டார்.

தீ உடல் முழுவதும் பிடித்ததும் `காதல் வாழ்க' என்று கத்தியபடி ரோட்டில் அங்கும், இங்கும் ஓடினார். மேலும் படிக்க

வன்னி மக்களின் நிலை மோசமாக உள்ளது: இலங்கை தலைமை நீதிபதி

இலங்கையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளனர் என்றும் அவர்கள் படும் துன்பங்களை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்று இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் என். சில்வா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நெகோம்பா மாவட்டத்தில் உள்ள மாரவிலா என்னுமிடத்தில் நீதிமன்றக் கட்டிட வளாகத்தை திறந்து வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறியதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அவர் கூறியதாக வெளியாகியுள்ள கருத்துக்கள்:

செட்டிகுளம் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களை நேரில் பார்வையிட்டேன். அவர்கள் மீது இலங்கை அரசு எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. இலங்கையின் சட்டத்தின் கீழ் அவர்கள் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது. இதை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதை கூறுவதற்காக இலங்கை அரசு என்னை தண்டித்தாலும் பரவாயில்லை. மேலும் படிக்க

பிரபாகரனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் : பத்மநாதன் பேட்டி

விடுதலைப்புலிகள்சர்வ தேச பொறுப்பாளர் பத்மநாதன் ஆஸ்திரேலிய ரேடியோ தமிழ் ஒலிபரப்புக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசுடன் நாம் பேசினோம். இலங்கை முக்கிய அமைச்சர் ஒருவரின் வழியாக இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புதலின்படி நடேசன், புலித்தேவன் ஆகியோர் ராணுவ முகாமுக்கு சென்று பேசுவதற்காக வெள்ளை கொடியுடன் சென்றனர். அப்போது இலங்கை ராணு வம் அவர்களை சுட்டு கொன்றது. இதே வெள்ளை கொடி பிடித்து சென்ற பொது மக்களையும் சுட்டு கொன்றனர்.

நான் இந்திய உளவுத்துறை ரா உத்தரவுப்படி நடந்து கொள்வதாக கூறப்படுவது தவறானது. பிரபாகரனுடன் நான் 30 வருடங்களுக்கு மேலாக ஆத்ம ரீதியாக கலந்து கொண்டவன். போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். மேலும் படிக்க

Wednesday, June 3, 2009

`உங்கள் படுக்கை அறை காட்சியை படம் எடுத்து விட்டேன்' மத்திய அரசு அதிகாரிக்கு மிரட்டல்?

கொளத்தூர் பூம்புகார் நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). மத்திய அரசு அதிகாரி. இவருடைய மனைவி சங்கீதா (30). சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களது வீட்டில் கடந்த 13-ந் தேதி இரவு ஜன்னல் ஓரம் வைத்திருந்த செல்போன் திருட்டு போனது. காலையில் சீனிவாசன் திருட்டு போன செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

எதிர் முனையில் பேசிய மர்ம ஆசாமி, ``நான் உங்கள் வீட்டில் திருட வரும் போது நீங்கள் இருவரும் மெய் மறந்து உல்லாசமாக இருந்தீர்கள். அந்த காட்சியை அப்படியே திருடிய செல்போனில் படம் பிடித்தேன். இன்னும் சிறிது நேரத்தில் அதனை இன்டர் நெட்டில் வெளியிடப் போகிறேன்'' என்று மிரட்டினான்.

இதனை கேட்டு திடுக்கிட்ட சீனிவாசன் மர்ம ஆசாமியிடம், ``அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள்; எங்கள் குடும்ப மானம் கப்பல் ஏறி விடும்'' என்று கெஞ்சினார்.

அந்த மர்ம ஆசாமி, "ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்வதாக'' கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

மர்ம ஆசாமியை மீண்டும் தொடர்பு கொண்டபோது, ``உடனடியாக ரூ.11/2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு ரெட்டேரி பாலம் அருகே வந்து பணத்தை கொடுத்து விட்டு உனது செல்போனை வாங்கி செல். இல்லையேல் இரவுக்குள் இன்டெர்நெட்டில் போட்டு விடுவேன். அப்புறம் எனக்கு அமெரிக்கா டாலராக கொட்டும்'' என்று மிரட்டினான். மேலும் படிக்க

அமெரிக்க அணுசக்தித் திட்ட ரகசியங்கள் தவறுதலாக வெளியீடு

அமெரிக்காவிலுள்ள அணுசக்தித் திட்டங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய ரகசிய விவரங்கள் தவறுதலாக இணயதளத்தில் வெளியிடப்பட்டது. இதை அமெரிக்க அரசும் ஒப்புக் கொண்டிருக்கிறது.

266 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணத்தை அமெரிக்க அரசுப் பதிப்பக அலுவலக இணையதளம் வெளியிட்டது. பல்வேறு தரப்பிலிருந்து கவலை தெரிவிக்கப்பட்டதும் இந்தத் தகவல்கள் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டன. அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான அணுசக்தித் திட்டங்கள் மற்றும் அணுஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் மூலப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள் அந்த ஆவணத்தில் இருந்தது. மேலும் படிக்க

Tuesday, June 2, 2009

பெற்ற தாயை 24 தடவை கத்தியால் குத்திக்கொன்ற பள்ளி ஆசிரியை

காதலனுடன் நெருக்கமாக இருந்ததை பெற்ற தாய் பார்த்து விட்டதால், காதலனுடன் சேர்ந்து தாயை கத்தியால் குத்திக்கொன்ற பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். இந்த கொலையை மறைக்க அவர் கொள்ளை நாடகம் ஆடியதும் அம்பலம் ஆனது.

டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-

டெல்லியில் பாஸ்சிம் விகார் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் கபூர். அக்கவுண்டன்ட் ஆன இவரது மனைவி கிரண். இவர்களுக்கு சவுரப் என்ற மகனும், சாக்ஷி (வயது 26) என்ற மகளும் உள்ளனர். சாக்ஷி, அதே பகுதியில் ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 29-ந் தேதி கிரண், அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அப்போது அவரது கணவரோ, மகனோ வீட்டில் இல்லை. மகள் சாக்ஷி மட்டும்தான் இருந்தார்.

சாக்ஷியிடம் போலீசார் விசாரித்தபோது, 2 கொள்ளையர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து தனது தாயாரை கத்தியால் குத்திக்கொன்று விட்டு, ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக சாக்ஷி கூறினார். கொள்ளையருக்குப் பயந்து, தான் வேறு ஒரு அறையில் ஒளிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

சாக்ஷியின் வாக்குமூலத்தில் போலீசாருக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. ஒரு கைக்கெடிகாரம் திருடு போய் இருந்தாலும், 9 கெடிகாரங்கள் அப்படியே இருந்தன. நிறைய பணத்துடன் ஒரு பர்சும் அப்படியே இருந்தது. கொலையுண்ட கிரண் உடலில் கம்மல்களும், 4 வளையல்களும் அப்படியே இருந்தன. அவரது உடலில் இருந்த காயமும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கொள்ளையர்கள், ஒரு மணி நேரம் வீட்டிலேயே இருந்ததாக சாக்ஷி கூறினார். எந்த கொள்ளையனும், கொள்ளை அடித்த வீட்டில் அவ்வளவு நேரம் இருக்க மாட்டான். கிரண் உடலில் 24 கத்திக்குத்து அடையாளங்கள் இருந்தன. எந்த குற்றவாளியும் அத்தனை தடவை குத்த மாட்டான் என்று போலீசார் கருதினர். மேலும், வீட்டில் நிறைய வழிகள் இருந்தபோதிலும், சாக்ஷி ஏன் வெளியே சென்று பக்கத்து வீட்டாரை உதவிக்கு அழைக்கவில்லை என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது.

சம்பவம் நடந்த அன்று, சாக்ஷி தனது செல்போனில் சன்னி பத்ரா (20) என்பவருடன் பல தடவை பேசி இருப்பது தெரிய வந்தது. ஆனால், போலீஸ் விசாரணையில் தனக்கு 15 ஆண் நண்பர்கள் உள்ளதாக கூறிய சாக்ஷி, சன்னி பத்ரா பற்றி எதுவுமே கூறாமல் மறைத்து விட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சன்னி பத்ராவை தேடிப் பிடித்தனர். அவர், டெல்லி அருகே நொய்டாவில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு சாக்ஷியுடன் ஒன்றரை ஆண்டாக தொடர்பு உண்டு. அவரிடம் துருவித்துருவி நடத்தப்பட்ட விசாரணையில், கிரணை தானும், சாக்ஷியும் சேர்ந்து கொலை செய்ததாக கூறினார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கிரணின் மகள் சாக்ஷியையும் போலீசார் கைது செய்தனர். சாக்ஷியும் அழுதபடி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த கொலை நடந்தது எப்படி? மேலும் படிக்க

தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்

சென்னை மாநகராட்சி மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு வழங்கும் திட்டம், முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான நாளை முதல் தொடங்கப் படுவதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.


ரிப்பன் மாளிகையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: முதலமைச்சர் கருணாநிதி நாளை 86வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 70 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டு வருகிறார்.

அதன் அடையாளமாக அவரது பிறந்த தினமான நாளை முதல் சென்னை மாநகராட்சி மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தை களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் மாநகராட்சியின் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. மேலும் படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...