Wednesday, June 3, 2009

`உங்கள் படுக்கை அறை காட்சியை படம் எடுத்து விட்டேன்' மத்திய அரசு அதிகாரிக்கு மிரட்டல்?

கொளத்தூர் பூம்புகார் நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). மத்திய அரசு அதிகாரி. இவருடைய மனைவி சங்கீதா (30). சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களது வீட்டில் கடந்த 13-ந் தேதி இரவு ஜன்னல் ஓரம் வைத்திருந்த செல்போன் திருட்டு போனது. காலையில் சீனிவாசன் திருட்டு போன செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

எதிர் முனையில் பேசிய மர்ம ஆசாமி, ``நான் உங்கள் வீட்டில் திருட வரும் போது நீங்கள் இருவரும் மெய் மறந்து உல்லாசமாக இருந்தீர்கள். அந்த காட்சியை அப்படியே திருடிய செல்போனில் படம் பிடித்தேன். இன்னும் சிறிது நேரத்தில் அதனை இன்டர் நெட்டில் வெளியிடப் போகிறேன்'' என்று மிரட்டினான்.

இதனை கேட்டு திடுக்கிட்ட சீனிவாசன் மர்ம ஆசாமியிடம், ``அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள்; எங்கள் குடும்ப மானம் கப்பல் ஏறி விடும்'' என்று கெஞ்சினார்.

அந்த மர்ம ஆசாமி, "ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்வதாக'' கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

மர்ம ஆசாமியை மீண்டும் தொடர்பு கொண்டபோது, ``உடனடியாக ரூ.11/2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு ரெட்டேரி பாலம் அருகே வந்து பணத்தை கொடுத்து விட்டு உனது செல்போனை வாங்கி செல். இல்லையேல் இரவுக்குள் இன்டெர்நெட்டில் போட்டு விடுவேன். அப்புறம் எனக்கு அமெரிக்கா டாலராக கொட்டும்'' என்று மிரட்டினான். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...