இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் வெளியகப் பணி பிரிவு புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம ராணுவ தளபதியுமான தமிழீழ தேசிய விடுதலை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப் படுத்தி இருக்கிறது.
தேசிய தலைவர் அவர்களை பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேர சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள், வேறு துறைப் போராளிகள் மற்றும் இலங்கை படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் பிரபாகரனின் வீர சாவை இப்போது உறுதிப்படுத்துகின்றனர். மேலும் படிக்க
No comments:
Post a Comment