ரஷியாவில் இருந்து கரோலினா என்ற பெண், இந்திய நடனத்தை பயில்வதற்காக மும்பை வந்தார். நடனம் பயின்று கொண்டிருந்தபோது, அவருக்கும், நாடக நடிகர் அர்மன் குமார் ஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நாடு, மதம், மொழி ஆகியவற்றை தாண்டி தீவிரமாக காதலித்தனர்.
பின்னர், இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு, மும்பையில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினார்கள். ஆனால், கடுமையான குளிர் நாடான ரஷியாவில் வசித்த கரோலினாவால் இந்திய வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர், கணவரை ரஷியாவுக்கு அழைத்தார்.
மனைவியின் அன்பு கட்டளையை மறுக்க முடியாத அர்மன் குமார் ஜா, மும்பையில் தான் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் விற்று பணமாக்கினார். மனைவி கரோலினாவுடன் ரஷியா புறப்பட்டார். ஆனால், பாஸ்போர்ட், விசா என்று, ரஷியாவில் தங்குவதற்கான அனைத்து ஆவணங்களை பெறுவதற்குள்ளாகவே பெரும் பகுதி பணம் காலியாகிவிட்டது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment