கேரள மாநிலத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மதம் பிடித்த யானைகள், பாகன்களை தூக்கி போட்டு மிதித்து கொன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன. இந்நிலையில், அதே கேரளாவில் பாகனுக்கு ஒரு யானை விசுவாசமாக காவல் காத்த சம்பவம் நடந்துள்ளது.
திருச்சூர் நகரம் யானைகளுக்கு புகழ் பெற்றது. அங்கு `சந்து' என்ற யானையை பராமரித்து வரும் பாகன், சாலைவழியாக சந்துவை கூட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வழியில் ஒரு கள்ளுக்கடையை பார்த்த பாகனுக்கு கள் குடிக்கும் ஆசை தோன்றியது. எனவே, யானையை ரோட்டு ஓரத்தில் நிறுத்தி விட்டு, கடைக்குள் சென்று ஆசை தீர கள் குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் கடையை விட்டு வெளியே வந்த பாகனுக்கு மது மயக்கம் ஏற்பட்டது. மேலும் படிக்க
No comments:
Post a Comment