இந்நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிபர் ராஜபட்சே கூறும்போது:
இலங்கை ராணுவத்துடனான போரில் புலிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கைகளால், வடக்கில் கடலோரப் பகுதியில் வெறும் 17 கிலோ மீட்டர் பரப்பு மட்டுமே இப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப் பகுதிகளையும் விடுவிக்க இலங்கைப் படைகள் தயாராக உள்ளன.
புலிகளின் பிடியில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசின் பாதுகாப்பு வளையத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர்.இதைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பு வளையத்துக்கு உள்பட்ட பகுதியில் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க
No comments:
Post a Comment