இந்நிலையில் நடிகை ஜெயசுதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. அவர் கடந்த 3-ந் தேதி நாமாலகுண்டு சவுரஸ்தா என்னும் பகுதியில் தனது கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது சாலையின் மத்தியில் கட்சி கொடியேற்றி, வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்ததாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும், பொது மக்களும் சிலகலகூடா என்ற போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் ஜெயசுதா திறந்து வைத்த தேர்தல் அலுவலகத்தை இழுத்துப் பூட்டி `சீல்' வைத்தனர்.
கட்சி கொடிக் கம்பத்தையும், தேர்தல் அலுவலகத்தில் இருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் படிக்க
No comments:
Post a Comment