Wednesday, January 26, 2011

குழந்தையின்மையா? தீர்வு சொல்கிறார் டாக்டர்.தேவிகா அவர்கள்


இந்தியாவின் தென் கோடியில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில் சாலிகிராமம் என்ற இடத்தில் சக்தி ஹாஸ்பிட்டல் என்ற சித்த மருத்துவமனையை நடத்தி வருபவர் Dr.S.தேவிகா அவர்கள்.

பாரம்பரிய முறையில் சித்த மருத்துவம் பயின்று தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று, இருபது வருடங்களுக்கும் மேலாக குழந்தையின்மைக்கான (INFERTILITY) சிறப்பு மருத்துவம் செய்து வருகிறார் மருத்துவர் S. தேவிகா அவர்கள்.

மருத்துவர் S. தேவிகா அவர்களின் தொழில் நேர்திதியும், அர்ப்பணிப்பும், தெய்வபக்தியும் அவரை இத்தொழிலுக்கு கைராசியான மருத்துவர் என்ற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. அவரால் பயனடைந்த தம்பதியர் ஏராளம்.

சக்தி மருத்துவமனையில், சித்த மருத்துவத்தின் மூலம் கருக்குழாய் அடைப்பு, (Fallopian tube block), சினைப்பை கட்டிகள் (PCOS) கருப்பை சவ்வு அழற்சி (Endometriosis), ஒழுங்கற்ற மாத விலக்கு (Irregular Menstruation), கருப்பைக் கழலை (Fibroid Uterus), பெரும்பாடு (அதிகமாக கட்டி கட்டியான உதிரப்போக்கு), தைராய்டு சுரப்பி கோளாறு (Thyroid Dysfunction), சினை முட்டை சரிவர வளராமை போன்ற காரணங்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

குழந்தையின்மை என்ற குறை இன்று பரவலாகக் காணப்படுகிறது. இது கணவன், மனைவி இருவரும் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் குறை இருக்கலாம். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் எந்தவித கட்டுபாட்டுடன் இல்லாமல் இருந்தும் குழந்தைபேறு இல்லை என்றால் கணவன் மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இதில் சில பிறவிக் குறைபாடுகள் தவிர ஆண்களுக்கான இதரப் பிரச்சனைகளுக்கும், பெண்களுக்கான பிரச்சனைகளுக்கும் சித்தமருத்துவத்தில் பக்க விளைவு இல்லாத மருந்துகளும் தீர்வுகளும் உள்ளன.

மேலும் விபரங்களுக்கு : டாக்டர்.தேவிகா

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...