பிரியாணி’ படத்தின் பாடல்கள் இன்டர் நெட்டில் வெளியாகியுள்ளன. பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே இப்பாடல்களை யாரோ திருடி இன்டர்நெட்டில் பரவ விட்டுள்ளது படக் குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதில் கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது யுவன்சங்கர் ராஜாவுக்கு 100–வது படம் என்பதால் வருகிற 31–ந்தேதி அவரது பிறந்த நாளில் பாடல்களை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் முன்னதாகவே பாடல்கள் இன்டர்நெட்டில் வந்து விட்டன. இதில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, இமான், எஸ்.எஸ்.தமன் ஆகிய 4 இசையமைப்பாளர்கள் இணைந்து பாடியுள்ளனர்.
வாலி எழுதிய ஒரு பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடி உள்ளனர். பாடல்களை இன்டர் நெட்டில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்கும்படி நடிகர் கார்த்தி டைரக்டர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் பிரேம்ஜி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் இன்று கிண்டி சி.பி.சி. ஐ.டி. அலுவலகத்துக்கு நேரில் சென்று கூடுதல் கமிஷனர் கரன்சின்ஹா, சூப்பிரண்டு அன்பு ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது யுவன்சங்கர் ராஜாவுக்கு 100–வது படம் என்பதால் வருகிற 31–ந்தேதி அவரது பிறந்த நாளில் பாடல்களை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் முன்னதாகவே பாடல்கள் இன்டர்நெட்டில் வந்து விட்டன. இதில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, இமான், எஸ்.எஸ்.தமன் ஆகிய 4 இசையமைப்பாளர்கள் இணைந்து பாடியுள்ளனர்.
வாலி எழுதிய ஒரு பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடி உள்ளனர். பாடல்களை இன்டர் நெட்டில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்கும்படி நடிகர் கார்த்தி டைரக்டர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் பிரேம்ஜி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் இன்று கிண்டி சி.பி.சி. ஐ.டி. அலுவலகத்துக்கு நேரில் சென்று கூடுதல் கமிஷனர் கரன்சின்ஹா, சூப்பிரண்டு அன்பு ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
No comments:
Post a Comment