Thursday, January 21, 2010

நடன அழகி கொலை: கைதான கேரள வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் நடன அழகியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைதான கேரள வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூர் காயத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்மா (வயது 30). நடன அழகியான இவர், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஓட்டல்களில் நடனமாடி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூர் வந்த அஸ்மா அங்கு கணவர் முகமது அலி என்பவருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜாபர்கான்பேட்டை திருவீதி அம்மன் கோவில் 2-வது தெருவில் வசிக்கும் தனது தோழி அனு என்ற அன்னம்மா வீட்டுக்கு வந்தார். முகமது அலி அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு அஸ்மாவும், அன்னம்மாவும் ஒன்றாக மது அருந்தினார்கள். அதன் பிறகு அன்னம்மாவின் கணவர் ரஞ்சித், அவருடைய நண்பர் கிரி என்ற கிரிதாஸ் ஆகியோரும் அங்கு வந்தனர். இரவு தூங்கிய அஸ்மா காலையில் படுத்த இடத்திலேயே பிணமாக கிடந்தார்.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...