Friday, October 30, 2009

உடலுறவுக்கு வரமறுத்ததால் கணவரை கொலை செய்த பேராசிரியை கைது?

கணவரை வெட்டிக்கொலை செய்ததாக கல்லூரி பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை கொலை செய்தது ஏன்? என்று அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில் உள்ள கீழக்குடியிருப்பில் வசித்தவர் செல்வம். இவர் தா.பழூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். இவருடைய மனைவி சுதாமதி ஒரு தனியார் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

சிலநாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரி செல்வம் அதிகாலை மர்மமான முறையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் மனைவி சுதாமதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

செல்வத்தை வெட்டியவர்கள் யார்? எதற்காக வெட்டினார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக செல்வத்தின் மைத்துனர் வசந்தகுமாரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் தலையில் வெட்டுக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சுதாமதியிடம் நேற்று போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...