Saturday, July 11, 2009

"எனது தாயாருக்கு 4 கணவர்கள் உள்ளனர்" சென்னை ஐகோர்ட்டில் இளம் பெண் கதறல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளக்கா பாளையம் முனியப்பன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கமலாதேவி. இவர்களது மகள் சிவரஞ்சனி (வயது 16). இவர் 10-ம் வகுப்பு படித்துள்ளார்.

இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் செல்லப்பன். இவரது மகன் சந்திரசேகரன் (22). இவருக்கும் சிவரஞ்சனிக்கு காதல் ஏற்பட்டது. கடந்த மே மாதம் 20-ந்தேதி சிவரஞ்சனி கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து தாயார் கமலா தேவி குமாராபளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பின்னர் அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து தனது மகளை மீட்டு தரும்படி கூறி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் முகோபாத்தி யாயா, ராஜஇளங்கோ ஆகியோர் வழக்கை விசாரித்து மாயமான இளம் பெண்ணை மீட்டு கோர்ட்டில் ஒப்படைக்கும்படி குமாரபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

அதனைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சின்னசாமி, மணிவண்ணன், திலகவதி ஆகியோர் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக தேடிவந்தனர்.

போலீஸ் விசாரணையில் சந்திரசேகரன், சிவரஞ்சனியுடன் பவானியில் தங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்த 2 பேரையும் மீட்டனர். மேலும் படிக்க


ஷில்பா ஷெட்டிக்கு இளவரசர் சார்லஸ் அளித்த விருந்து

Related post



1 comment:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...