Friday, July 10, 2009

மகன் காதல் விவகாரம்: தாயை நிர்வாணமாக்கி வீதியில் இழுத்துச்செல்லப்பட்ட கொடூரம்

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள படியவாலி கிராமத்தை சேர்ந்தவர் ஷியாமா (40),. இவரது மகன் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் அங்குள்ள ஒரு வயலில் மறைவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த சிலர் பெண்ணின் தந்தையிடம் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது 4 மகன்களுடன் அங்கு வந்தார். அவர்கள் அப்பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர். இது பற்றிய தகவல் ஷியாமாவுக்கு தெரிய வந்தது. உடனே அவர் பதறியடித்த படி அங்கு ஓடினார்.

உடனே ஷியாமாவின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்தனர். பொதுமக்கள் முன்னிலையில் அவரது ஆடையை களைந்து நிர் வாணப்படுத்தினர். அத்துடன் விடாமல் அவரை தெருவில் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.
மேலும் படிக்க

சுகாதாரமற்ற இலங்கை நிவாரண முகாம்கள்: வாரந்தோறும் 1400 தமிழர்கள் சாவு


படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை சோனா

Related post



1 comment:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...