Friday, February 26, 2010

ஆன்மீக மையத்தில் விபசாரம் நடத்திய சாமியாருடன் பிரபல பாலிவுட் நடிகை கைது

டெல்லியில் நடைபெற்ற பரபரப்பான விபசார வேட்டையில், `ஆன்மீக மைய' சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார். விபசாரத்தில் ஈடுபட்ட எம்.பி.ஏ. மாணவி, இரு விமான பணிப்பெண்கள், பிரபல பாலிவுட் நடிகை உள்பட 6 பெண்களும் பிடிபட்டனர்.

தெற்கு டெல்லி, கான்பூர் பகுதியில் சாய்பாபா கோவில் கட்டி, ஆன்மீக மையம் நடத்தி வந்தவர், இச்சதாரி சுவாமி பீமானந்த்ஜி மகாராஜ் சித்ரகூட் வாலே என்று அழைக்கப்படும் ஷிவ் முராத் திவிவேதி (வயது 39). அவருடைய ஆன்மீக மையத்தில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் `வாடிக்கையாளர்' போல் அங்கு சென்று கண்காணித்தார். அப்போது அங்கு விபசாரம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆன்மீக மையத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...