Thursday, February 26, 2009

மாணவியை கற்பழித்த 2 மருத்துவ மாணவர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில்

கேரளா மாநிலம் கோட்டயத்தில், எஸ்.எம்.இ. என்ற தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி முதலாம் ஆண்டு மாணவி ஒருவரை மூத்த மாணவர்கள் `ராக்கிங்' செய்தனர். பாலியல் தொந்தரவு செய்து, பரிசோதனைக் கூடத்தில் வைத்து கற்பழித்தனர்.

3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் ரஞ்சித் வர்கீஸ், ஷெரீன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கே.சசிதரன் நாயர் தீர்ப்பளித்தார். மற்றொரு மாணவர் ஷாபிக் ïசுபுக்கு 3 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் 3 பேரும் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், மொத்த அபராத தொகை 45 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கல்லூரி முதல்வர் உள்பட 6 பேரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் செய்திகள்....

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் தொடர்புடைய சென்னை போலீஸ் துணை கமிஷனர் திடீர் `சஸ்பெண்டு'

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...