இன்று கோவை மத்திய சிறையில் ஏற்பட்ட கலவரத்தி்ல் 3 வார்டன்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று கோவை மத்திய சிறையில் திரைப்படம் காண்பிப்பது வழக்கம். அது போல் இன்றும் படம் திரையிடப்பட்டது. திரைப்படம் முடிந்து போகும் போது கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. கலவரத்தில் கைதிகளும் வார்டன்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 வார்டன்கள் கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டன்களால் தாக்கப்பட்டு காயம்மடைந்த 5 கைதிகள் சிறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்.......தடையை மீறி உயர்நீதிமன்றத்தில் நுழைய வழக்கறிஞர்கள் முடிவு.
No comments:
Post a Comment