Sunday, February 8, 2009

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கான கேள்விகள்? -நாக.இளங்கோவன்

பழ.நெடுமாறனைத் தலைமையாகக் கொண்டு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, ம.தி.மு.க, பா.ம.க, வி.சியொடு பிற அரசியல் சார்பிலரைக் கொண்டு அமைக்கப் பட்டிருக்கின்ற இந்த இ.த.பா.இ தமிழ் மக்களால் வரவேற்கப் படுகிறது.

அதே நேரத்தில் சில அடிப்படை கேள்விகளை இவ்வமைப்பு தோற்றுவிக்கிறது.

ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயரிடாமல் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயரிட்டது, செயலலிதா, ஈழம் என்றே ஒன்று இல்லை - இலங்கை என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொன்னதாலா என்ற வினா எழுந்தாலும் பிற வினாக்களையே முதன்மையாகக் கருதவேண்டும்.

இ.த.பா இயக்கத்தில் உறுப்பினர்கள் வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள். அது நமக்கு ஆறுதல் தருகிறது.

ஆனால், அதில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் ம.தி.மு.கவும் வெளிப்படையாக அ.தி.மு.க ஆதரவு கொண்டவை.

பா.ம.க ஒரு தரம் காங்கிரசு தலைமையை ஏற்போம் என்கிறது. மறு தரம் தி.மு.க தலைமையை ஏற்போம் என்கிறது. உள்ளுக்குள்ளே அ.தி.மு.கவுடனும் பேச்சு நடத்துகிறது என்றே செய்திகள் சொல்கின்றன.

ஆக, இந்தக் கூட்டணி எதை சாதிக்கப் போகிறது என்று, ஈழத்தமிழர் பால் அக்கறை உள்ள தமிழக இளைஞர்களும் பொதுமக்களும் கேட்டால் என்ன விடை சொல்லும் இ.த.பா.இ?

மேலும்......

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...