Wednesday, February 18, 2009

சென்னை : பிரபல ஜவுளிக்கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை, கடைகள் அடைப்பு.

சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளான ஆர்.எம்.கேவி மற்றும் போத்தீஸ் நிறுவனங்களில் அதிரடியாக இன்று காலை 9 மணிமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஒரேநேரத்தில் சென்னை, திருநெல்வேலி கடைகளிலும், அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. இதனால் கடைகள் மூடப்பட்டுள்ளன. துணி வாங்க வந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் கடைகளுக்கு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின் கடைகள் திறக்கப்படும் எனத்தெரிகிறது. இதனால் தி.நகர் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.மேலும்.......

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...