Saturday, February 14, 2009

இலங்கைப் பிரச்னை: ஜெனீவாவில் தமிழர் தீக்குளிப்பு

இலங்கை பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, ஸ்விட்சர்லாந்தில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் ஐரோப்பிய தலைமையக வளாகத்தில் பிரிட்டன் வாழ் இலங்கைத் தமிழர் தீக்குளித்து உயிரிழந்தார்.

ஐ.நா. வளாகத்தில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சதுக்கத்தில், வியாழக்கிழமை ஒருவர் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக போலீஸôரிடம் அந்த வழியாகச் சென்றவர்கள் கூறியுள்ளனர்.

போலீஸôர் செல்வதற்குள் அவர் இறந்துவிட்டதாகவும், அவர் பிரிட்டனில் வாழும் இலங்கைத் தமிழர் என்பதும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்ததாக ஜெனீவா நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் எரிக் கிராண்ட்ஜீன் தெரிவித்தார்.

இறந்தவர் லண்டனில் இருந்து வந்த முருகதாசன் (27) என்றும், இவர் இலங்கை பிரச்னை தொடர்பாக 7 பக்க மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்தார் எனவும் தெரியவந்துள்ளது.

இறந்த முருகதாசனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அந்தச் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனர். மேலும் செய்திகள்.......

சரிந்த பொருளாதாரம் நிமிர சில ஆண்டுகள் பிடிக்கும்: அமெரிக்க அதிபர் ஒபாமா

பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல்: 25 பேர் பலி

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...