Thursday, March 5, 2009

ஆந்திராவில் அடிக்குது யோகம். இலவச கலர் டெலிவிஷன்-மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம்

ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் மற்றும் மாதந்தோறும் ரூ.1000 முதல் 2000 வரை ரொக்கப்பணம் வழங்குவோம் என்று, தெலுங்குதேசம் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்து உள்ளது.

ஆந்திர மாநிலத்தில், பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.

காங்கிரஸ், நடிகர் சிரஞ்சீவியின் `பிரஜா ராஜ்யம்' கட்சிகளுடன் தெலுங்கு தேசம் கட்சியும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தெலுங்குதேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபுநாயுடு, மாதிரி தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் வழங்கப்படும். அத்துடன் ஏழை குடும்ப தலைவிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை மாதந்தோறும் ரொக்கப்பணம் வழங்கப்படும். பரம ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரமும், ஏழைகளுக்கு ரூ.1500-ம், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்தலைவியின் பெயரில் இந்த பணம் வங்கியில் செலுத்தப்படும். `ஏ.டி.எம்.' கார்டுகள் மூலம் மாதந்தோறும் அவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஏழை குடும்பத்தினரின் உணவு, மருத்துவம் மற்றும் கல்வி செலவுகளுக்காக இந்த பணம் வழங்கப்படுகிறது.

ஏழைகளுக்கு ரொக்கப்பணம் வழங்கும் இந்த திட்டம் சாத்தியமானதுதான். பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா, சிலி உள்பட 30 நாடுகளில் இதுபோன்ற திட்டம் நல்ல பயனை அளித்து இருப்பதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

ஏழைக்குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின்விளக்குகள், ஒரு மின்விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு களைத்து வரும் ஏழை மக்களுக்கு இலவச டி.வி. நல்ல பொழுதுபோக்காக இருப்பதுடன் அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கும் உதவும்.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்த திட்டம் அமலில் இருப்பதால், ஆந்திராவிலும் இலவச டி.வி. வழங்கும் திட்டம் சாத்தியமானதுதான். அத்துடன் மக்களின் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்''.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். மேலும் தங்கள் கோரிக்கை தொடர்பான பல்வேறு யோசனைகளை செல்போன் மூலம் தனக்கு தெரிவிக்கலாம் என்றும் பேட்டியின்போது அவர் தெரிவித்தார். மேலும்.......


கட்சி மாறுகிறார் கண்ணப்பன்?


நான் ஓய்வு பெறுவேன் என்று கனவு காண்பது நடக்கவே நடக்காது ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...