Sunday, March 1, 2009

சரியான நேரத்தில் கொடுக்கப்படாத விருதுக்கு மதிப்பில்லை: இளையராஜா

சரியான நேரத்தில் கொடுக்கப்படாத விருதுக்கு மதிப்பில்லை என்றார் இளையராஜா.

"ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்தற்காக சிறந்த இசை, சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ்த் திரைப்பட இசை உலகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சென்னை வடபழனியில் உள்ள தமிழ்த்திரை இசை அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ் விழாவில் கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, இசையமைப்பாளர்கள் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், இயக்குநர் பாலசந்தர், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

இளையராஜா:

ரஹ்மானுக்கு எந்தப் பாராட்டு விழா நடந்தாலும் இன்றைய விழா போன்று நடக்காது. தங்கக் கிரீடமே சூட்டலாம். இருந்தாலும், இந்த இசைக் குடும்பத்தின் பாராட்டுகள் தான் முக்கியம்.

தேர்வுக்குழு தேர்வு செய்யும் படங்கள் மட்டுமே ஆஸ்கர் போட்டிக்குப் போகின்றன. அப்படிப்போன படத்துக்குத்தான் இப்போது விருதுகள் கிடைத்துள்ளன.

இசை அமைப்பாளர்களுக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்படாத விருதுக்கு மதிப்பில்லை.

எம்.எஸ்.விஸ்வநாதன்:

மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களை மதித்தால் நல்ல இசை வரும். இங்குள்ளவர்களின் ரசிகன் நான். எல்லோருடைய பாராட்டுகளையும் கேட்டுவிட்டு அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டுவேன். எனக்கு விருதுகள் வேண்டாம். மக்களின் அன்பு போதும். இங்கு உள்ளவர்கள் புகழ் அடையும்போது முதலில் சந்தோஷப்படுவதும் நான்தான். ரஹ்மானின் குடும்பத்தைவிட அதிகம் சந்தோஷம் அடைந்தது நான் தான்.

பாலமுரளி கிருஷ்ணா:

புராண காலங்களில் இசையில் புதுமையை உருவாக்கியவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் கடவுள் அனுமான். இப்போது ரஹ்மான். அவரைப் பற்றிப் புகழக் கூடாது. ஏனென்றால் அப்பா மகனைப் புகழ மாட்டார். மனதுக்குள் சந்தோஷப்படுவார். ஆஸ்கர் விருது வந்த பிறகு இதைவிட வேறு ஏதாவது விருது வருமென்றால் அதுவும் ரஹ்மானுக்குத்தான்.

ஏ.வி.எம்.சரவணன்:

இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது நல்ல விஷயம். இந்த ஒற்றுமை கடைசி வரை நீடிக்க வேண்டும். ஆஸ்கர் மேடையில் ரஹ்மான் தமிழில் பேசியது தமிழர்களாகிய நமக்குப் பெருமையான விஷயம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை உலகில் கடந்த 70 ஆண்டுகளாக சாதனை படைத்து வருகிறார். ஆனால் அவரது சாதனை முழுமையாக மதிக்கப்படவில்லை. ஒரு பத்ம பூஷண் விருதாவது கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. இதுபோன்று பாலமுரளி கிருஷ்ணா, ஆரூர்தாஸ் போன்ற நிறையக் கலைஞர்களின் சாதனைகள் மதிக்கப்படாமலேயே இருக்கிறது. இதை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லத்தான் இதை இங்கு கூறுகிறேன்.

விழாவில் ஏற்புரை வழங்கி ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது:

ஆஸ்கரை வாங்குவதற்கு அப்பாவின் ஆசிதான் காரணம். அவரின் கஷ்டத்தைத்தான் நான் அறுவடை செய்திருக்கிறேன். சிறுவயதில் ஜப்பானியர்களும், சீனர்களும் ஆஸ்கர் விருதுகளை வாங்கும்போது, இந்தியனுக்குத் தகுதி இல்லையா என யோசிப்பது உண்டு. "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் மொத்த இசையையும் மூன்று வாரங்களில் முடித்து விட்டேன். அப்போது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. படத்தைப் பார்த்த பிறகு நன்றாக வந்திருந்தது. எல்லோருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். யாருடனும் என்னை ஒப்பிட வேண்டாம் என்றார். மேலும்.......


'கருணாநிதிக்கு உச்ச நீதிமன்றம் நெற்றியடி': ஜெயலலிதா


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நீடிக்கும் வக்கீல் சங்கத் தலைவர்கள் அறிவிப்பு

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...