Thursday, March 26, 2009

அ.தி.மு.க. கூட்டணியில் புது சிக்கல்

3 தொகுதிகளைபெற இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் போட்டிபோடும் நிலையில், தற்போது பா.ம.க.வைவிட ம.தி.மு.க. கூடுதல் தொகுதி கேட்பதால் அ.தி.மு.க. கூட்டணியில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக குழு அமைத்துக் கொண்டு, அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசிவருகின்றன. தற்போது, 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தங்களுக்கு, மதுரை, வடசென்னை, திருப்பூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், தஞ்சாவூர் அல்லது திருச்சி ஆகிய 6 தொகுதிகளை அ.தி.மு.க.விடம் கேட்டு வருகின்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தங்கள் பங்கிற்கு வடசென்னை, நாகப்பட்டினம், திருப்பூர், தென்காசி, கோவை, விருதுநகர் ஆகிய 6 தொகுதிகளை கேட்டு வருகின்றது.

இதில், சிக்கல் என்னவென்றால், வடசென்னை, திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 3 தொகுதிகளை இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் கேட்டு வருகின்றன. இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் சிக்கல் நீடித்து வந்தது. இரு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும் அழைத்து, அ.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டு குழுவினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவந்தனர்.

மற்றொரு பக்கத்தில் ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில், யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து, பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தின்போது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் பெரும்பாலானோர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து பா.ம.க.வும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் புதிதாக இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதைக் கேள்விப்பட்ட ம.தி.மு.க. தரப்பினர், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் கொடுத்தால், எங்களுக்கு அதைவிட ஒரு தொகுதி கூடுதலாக தரவேண்டும் என்று புதிய கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏனென்றால், அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடர்ந்து 5 வருடங்கள் நீடித்து வருகிறது. அ.தி.மு.க. நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கும் ம.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது. மேலும், புதிதாக கூட்டணியில் சேர்ந்துள்ள பா.ம.க.வுக்கு வடமாவட்டங்களில் மட்டும்தான் செல்வாக்கு என்றும், தங்களுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு இருப்பதாக ம.தி.மு.க.வினர் கூறிவருகின்றனர். இதனால், பா.ம.க.வைவிட கூடுதல் தொகுதி வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் ம.தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே, 3 தொகுதிகளை பெற இரு கம்ïனிஸ்டு கட்சிகளும் போட்டிபோட்டு கொண்டிருக்கும் நிலையில், தற்போது ம.தி.மு.க. கூடுதல் தொகுதி கேட்பது அ.தி.மு.க. கூட்டணியில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும்.......

'சென்செக்ஸ்' மீண்டும் 10,000 புள்ளிகளை தாண்டியது

ராஜபட்சவின் அழைப்பை நிராகரித்தது புலிகள் ஆதரவு கட்சி

தே.மு.தி.க. தனித்து போட்டி

Related post



1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...