Sunday, March 8, 2009

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜெயலலிதா இன்று சென்னையில் உண்ணாவிரதம்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கும் ஜெயலலிதா மாலை 5 மணிக்கு முடிக்கிறார். இதற்காக உண்ணாவிரதம் நடைபெறும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் அமர்ந்து ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

மேலும் தொண்டர்கள் உட்காருவதற்கு வசதியாக பந்தல் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. உண்ணாவிரதத்தின் போது இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரத மேடையில் அதற்காக தனியாக உண்டியல் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த உண்டியலில் ஜெயலலிதா முதலில் நிதியை அளித்து உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். ஜெயலலிதாவின் உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்திற்கு ம.தி.மு.க., இந்திய கம்ïனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காலம் கடந்த அறிவிப்பு என்றாலும், ஜெயலலிதாவின் உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போராட்டத்தை வரவேற்பதாக கூறியுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

உண்ணாவிரதம் நடைபெறும் சேப்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் துணை கமிஷனர் கணேசமூர்த்தி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், அந்த பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும்.......

பெங்களூர் அருகே பண்ணை வீட்டில் நடனத்துடன் மது விருந்து: 110 பேர் கைது


போராட்டத்தை வாபஸ் பெறுவது பற்றி புதன்கிழமை முடிவு எடுக்கப்படும் வக்கீல் சங்க தலைவர்கள் அறிவிப்பு

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...