அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கம்பெனிகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் உயர் பதவிகளில் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்காவில் உயர் தொழில்நுட்பம் படித்த ஆட்கள் சரிவர கிடைக்காததால் இந்தியா, சீனா நாடுகளை அமெரிக்கா பெரிதும் நம்பி இருந்தது. இப்போது பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால், பல நிறுவனங்கள் லாபம் குறைந்த நிலையில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல நிறுவனங்கள் ஆட்குறைப்புகளை செய்து வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்நாட்டு அமெரிக்கர்கள் தான்.
இதனால் அமெரிக்க மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தி, திறமையான மாணவர்களை உருவாக்கி அவர்களை வெளிநாட்டு பணியாளர்களுக்கு மாற்றாக கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. அப்படி அவர்கள் வரும்போது இந்தியர்கள், சீனர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து நாடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதுபற்றி டியூக், ஹார்வர்டு, பெர்க்கிலி ஆகிய பல்கலைக்கழகங்களில் படித்து வரும் 1203 இந்தியர்கள் மற்றும் சீனர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியரான விவேக் வாத்வா தலைமையில் நடந்த இந்த ஆய்வில் தெரிய வந்த விவரங்கள்.......
சென்னை தி.நகரில் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு
காந்திஜியின் பொருள்களை ஏலம் விட தில்லி உயர்நீதிமன்றம் தடை
No comments:
Post a Comment