கேள்வி:- நீண்ட நாட்களுக்கு பிறகு அலுவலகத்திற்கு வந்திருக்கிறீர்கள், இன்றைக்குக் என்னென்ன காரியங்களை கவனிக்கப் போகிறீர்கள்?
பதில்:- தலைமைச் செயலாளரில் இருந்து எல்லா துறை அதிகாரிகளையும் தலைமைச் செயலகத்துக்கு வந்து தான் பார்க்கவில்லை. ஆனால், மருத்துவமனையில் இருந்த போதும், வீடு திரும்பிய பிறகும் எந்த அதிகாரிகளையும் சந்திக்காமல் இல்லை. அவர்களைச் சந்தித்துக் கொண்டு தான் இருந்தேன். அவர்கள் தெரிவிக்கும் விவரங்களின் அடிப்படையில் விவாதித்து, அரசின் சார்பில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி:- கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் எந்த நிலையில் இருக்கின்றன?
பதில்:- திமுக, காங்கிரஸ் சார்பாக இரண்டு குழுக்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில், அந்த இரண்டு குழுக்களும் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றன.
கேள்வி:- திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நல்ல செய்தியை விரைவில் அறிவிப்போம் என காங்கிரஸ் கூறுகிறது. அப்படி வந்தால் வரவேற்பீர்களா?
பதில்:- நல்ல செய்தி எங்கிருந்து எப்போது வந்தாலும் வரவேற்போம்.
கேள்வி:- மதிமுகவில் இருந்து விலகிய கண்ணப்பன், உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவமனையில் விசாரித்தது சர்ச்சையாகி இருக்கிறதே?
பதில்:- தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலை, அரசியல் பண்பாடு, அரசியல் நாகரிகம் ஆகியன எந்த அளவுக்கு தாழ்ந்து விட்டன என்பதற்கு இது ஓர் உதாரணம்.
கேள்வி:- மூன்றாவது அணி, நான்காவது முறையாக அமைந்திருப்பதைப் பற்றி?
பதில்:- நான்காவது முறையாக உருவாகியுள்ள மூன்றாவது அணி என்று செய்தி போடலாம்.
கேள்வி:- கூட்டணியில் சேர்வது பற்றி பாமகவிடம் இருந்து ஏதாவது செய்தி வந்ததா?
பதில்:- அவர்கள் இதுவரை என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.
கேள்வி:- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறியிருக்கிறதே?
பதில்:- திமுகவும், காங்கிரஸ் கட்சிகளும் இப்போது தான் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்து இருக்கின்றன. இதன் முன்னேற்றத்தில், உங்களுடைய (பத்திரிகையாளர்கள்) ஆசைகள் நிறைவேறினாலும் நிறைவேறலாம்; நிறைவேறாமல் போனாலும் போகலாம்.
கேள்வி:- உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்பாததால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே?
பதில்:- தமிழகத்தில் வழக்கறிஞர்களே நீதிமன்றங்களை மதிக்கவில்லை என்றால், அதன் பிறகு என்ன இருக்கிறது என்று சாதாரண மக்களே சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நான் அவ்வளவுதான் சொல்ல முடியும்'' என்றார் கருணாநிதி. மேலும்.......
போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம்
கேரள கம்யூ., கூட்டணியில் பிளவு
No comments:
Post a Comment