Wednesday, March 4, 2009

கடப்பாரையால்அடித்து கணவனை கொலை செய்த மனைவி கைது

கடப்பாரையால் அடித்து கணவனை கொன்று விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டுலுபட்டியை சேர்ந்தவர் மொக்கைராஜ்(வயது 41). இவரது மனைவி செல்வராணி(35). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மொக்கைராஜ் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வாராம். சம்பவத்தன்றும் மொக்கைராஜ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராணி, தனது கணவர் மொக்கைராஜின் தலையில் கடப்பாரையால் அடித்து உள்ளார்.

இதில் நிலைகுலைந்த மொக்கைராஜ் அதே இடத்தில் இறந்து விட்டார். இதனால் பதறிப்போன செல்வராணி, இந்த கொலையை மறைப்பதற்காக போதையில் வந்த தனது கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இருந்த போதிலும் மொக்கைராஜின் சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் செல்வராணியை அழைத்து விசாரித்தனர். அப்போதும் அவர் நடந்த சம்பவத்தை மறைத்துள்ளார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாத செல்வராணி, தனது கணவரை கொலை செய்ததை ஒத்துக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். குடித்து விட்டு வந்த தனது கணவரை கடப்பாரையால் அடித்ததில் அவர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதாகவும், அதை மறைக்க தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகமாடியதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு செல்வராணியை போலீசார் கைது செய்து உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்.......

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நவீன் சாவ்லா நியமனம்

தமிழக தேர்தல் அதிகாரிக்கு கருணாநிதி கண்டனம்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...