லாகூரில் தாக்குதல் நடத்தியவர்களுடன் எங்களுக்குத் தொடர்பில்லை என விடுதலைப்புலிகளின் செய்தித்தொடர்பாளர் திலீபன் ஆஸ்திரேலிய வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்களா என அவரிடம் கேட்டதற்கு, நாங்கள் அதுதொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றார். தங்களுடன் 3,50,000 மக்கள் வசித்து வருவதாகக் குறிப்பிட்ட திலீபன், நான்கு கிராமங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்றார்.
தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட திலீபன், உணவுப் பற்றாக்குறை காரணமாக இரு பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் தங்களுடன்தான் வசித்துவருகிறார் என்றும் திலீபன் அந்த பேட்டியின்போது தெரிவித்தார். மேலும்.......
இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்
No comments:
Post a Comment