காங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள நீண்ட கால நட்பைப் பற்றி நமக்குத் தெரியாதா என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரசை கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விட்டிருப்பது தன்னுடன் கூட்டு சேருவதற்காக முதலிலே வந்து பேசிய இடதுசாரி கட்சிகளை ஏமாற்றுவதற்காகத் தானா? என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், 5.3.2009 தேதியிட்டு ஜெயலலிதா பெயரில் வெளிவந்த இரண்டு அறிக்கைகளில் ஒன்றில் "அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரசை அழைக்கவில்லை'' என்று ஜெயலலிதா தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அந்தச் செய்தியிலும் என்னை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து, "கருணாநிதி, தனது அறிக்கையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு நான் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அ.தி.மு.க.விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நீண்ட கால நட்பை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி புதை மண்ணில் மாட்டிக் கொண்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளிவர வேண்டும் என்று ஆலோசனை கூறினேனே தவிர, எங்கள் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை முதலில் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு காங்கிரசுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார் என்று நான் எனது அறிக்கையிலே கூறியதாக ஜெயலலிதா தன் அறிக்கையிலே கூறியிருப்பது உண்மை தானா? மேலும்.......
இலங்கை ராணுவத் தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் பலி
ஜெயலலிதா உண்ணாவிரதம் மார்ச் 9-க்கு மாற்றம்
No comments:
Post a Comment